ஈரான் திருவிழாவில் தீ மிதிப்பு: 11 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் காயம் - உலக செய்திகளின் தொகுப்பு (Video)
பாரசீக புத்தாண்டை முன்னிட்டு, ஈரானின் பாரம்பரிய தீ மிதிப்பு திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற குறித்த திருவிழாவில் பங்கேற்றவர்களில் 3,500 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் உள்ளூர் பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விழாவானது மார்ச் மாதம் 20ஆம் திகதி முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் பெப்ரவரி 20ஆம் திகதியிலிருந்தே குறித்த விழா தொடர்பில் மொத்தம் 26 பேர்கள் மரணமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு...