தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு
இலங்கையில் பணியாற்றவுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்
சமர்ப்பிக்கும் நிகழ்வொன்று இடபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு கண்டியில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்றுமுன் தினம் (02.02.2023) நடைபெற்றுள்ளது.
இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களுமே நற்சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர்.
புதிய தூதரக அதிகாரிகள்
இந்த நிகழ்வு தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான கூற்றுக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் புதிய தூதரக அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கண்டியில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது வியன்னா மாநாடு மற்றும்
ஏனைய உலகளாவிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.