இலங்கைக்கு கிடைத்துள்ள பில்லியன் கணக்கான டொலர்கள்! மத்திய வங்கியின் அறிவிப்பு
வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்காக சென்றுள்ள இலங்கையர்களிடமிருந்து இந்தாண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள விபரங்கள்
இந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 541 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாகவும் இது, கடந்த ஜூலை 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 261 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 2022ஆம் ஆண்டு இலங்கைக்கு 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலைவரை 3,363.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பட்டுள்ளதாகவும், இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
