Switch to
   
   
   
செய்தி
(2ம் இணைப்பு)
  • Photo
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு திருப்பதியில் பூரண கும்ப மரியாதை: வைகோ கண்டனம்
[ சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 04:41.03 PM GMT +05:30 ]
இலங்கை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு  திருப்பதி கோயிலில் பூரண கும்ப மரியாதை அளிப்பது தமிழர்களை வேதனைப்படுத்துவதாக உள்ளது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சவுக்கு இந்துக்களின் புனிதத் தலமான திருப்பதி கோயிலில் இராஜ மரியாதை அளிப்பது தமிழர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிப்போடுவதாக உள்ளது.

குழந்தைகள், முதியவர்கள் என்று லட்சக்கணக்கான தமிழ் மக்களை குண்டு வீசிக் கொன்றவர் ராஜபக்ச. அவருக்கு ஆயுத உதவி செய்த மத்திய அரசு தற்போது அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பது வெந்த புண்ணில் சூட்டுக்கோல் பாய்ச்சும் வகையில் இருக்கிறது.

தமிழர்களை கொன்ற அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. ராஜபக்சவை இந்தியா வரவேற்பதும் கோயிலில் அவருக்கு மரியாதை செய்வதும் உலகை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் வஞ்சக நாடகம் ஆகும்.

தமிழர்களை இழிவுப்படுத்தும் மத்திய அரசின் இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement