Switch to
   
   
   
செய்தி
முல்லைத்தீவை நோக்கி வெலிஓயா இராணுவத்தினர் நள்ளிரவில் நடத்திய கடும் எறிகணைத் தாக்குதல்: குழந்தை பலி; முல்லைத்தீவு அரச அதிபர் உட்பட 16 பேர் காயம்.
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2008, 04:48.37 AM GMT +05:30 ]
முல்லைத்தீவு நகரப்பகுதியை நோக்கி நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் இராணுவத்தினர் நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலில் ஒரு வயதுக் குழந்தையொன்று உடல் சிதறி மரணமாகியுள்ளது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைப் பணிப்பாளரின்  மனைவி  உட்பட  16 பேர் காயமடைந்துள்ளனர்

முல்லைத்தீவு மருத்துவமனை, அரச அதிபர் இல்லம், மருத்துவர்கள் குடியிருப்பு ஆகியவற்றை நோக்கியே   இலங்கைப் படையினர் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலில் ஒன்றரை வயதுக் குழந்தையான முள்ளியவளை நீராவிப்பிட்டியைச் சேர்ந்த ஐயன் சங்கீர்த்தன் உடல் சிதறிப் பலியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைப்  பணிப்பாளர் சண்முகராஜாவின் மனைவி திருமதி ரேணுகா உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையை அண்டிய நீராவிப்பிட்டி, உடுப்புக்குளம், குமரபுரம் மற்றும் தண்ணீரூற்று ஆகிய பிரதேசங்களிலும் நேற்றிரவிலிருந்து தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

முல்லைத்தீவு வைத்தியசாலை  கட்டிடங்கள் , வைத்தியசாலைப் பணிப்பாளரின் விடுதி, வேறு பொதுமக்களின்   வீடுகள், பொதுக் கட்டிடங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன. சில வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளன.

காயமடைந்தோர் விவரம்:

முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார்

சண்முகராசா ரேணுகா (வயது 36)

முல்லைத்தீவைச் சேர்ந்த சந்தியா (வயது 40)

நீராவிப்பிட்டியைச் சேர்ந்த தே.சந்தனவதி (வயது 50)

தண்ணீரூற்றைச் சேர்ந்த பிறேமலா (வயது 33)

நீராவிப்பிட்டியைச் சேர்ந்த த.அன்னலட்சுமி (வயது 57)

நீராவிப்பிட்டியைச் சேர்ந்த கண்மணி (வயது 50)

உடுப்புக்குளத்தைச் சேர்ந்த சு.சுவேந்திரலதா (வயது 23)

முள்ளியவளையைச்சேர்ந்த வி.ஆரெழினி (வயது 05)

தண்ணீரூற்றைச் சேர்ந்த இ.தேகன் (வயது 21/2)

குமாரபுரத்தைச் சேர்ந்தவர்களான

த.வீரம்மா (வயது 57)

இ.ருக்குமணி (வயது 72)

வே.நடராசா (வயது 56)

ஐ.இராசகுமாரி (வயது 36)

ஐ.சங்கீதா (வயது 10)

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை காயமடைந்தவர்கள்  முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளை, நடத்தப்பட்ட இந்த எறிகணைத் தாக்குதல்களினால் நிலைகுலைந்து போன பொதுமக்கள் அல்லோல கல்லோலப்பட்டுப் போக்கிடமின்றிச் சிதறியோடி அவலப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement