|
| பிரித்தானிய இராணுவப் பொலிசார் அராஜகம் சிறுவர் குழந்தைகள் தூக்கி எறியப்பட்டனர் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009, 08:30.28 AM GMT +05:30 ] | |
பாராளுமன்றம் முன்பாக அமைதியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் மீது போலீசார் அராஜகம் சிறுவர் குழந்தைகள் அனைவரும் தூக்கி எறியப்பட்டனர் |
(வீடியோ பார்ப்பதற்கு (VIDEO) வீடியோ என்ற படத்தின் மேல் அழுத்தவும்)
பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள், உடனே அணிதிரளுங்கள் பாராளுமன்றம் நோக்கி !!! எமது சிறுவர்கள் குழந்தைகள் , முதியோர் என பாராமல், பிரித்தானிய இராணுவ பொலீசார், இன்று காலை எமது தமிழ் உறவுகளை தூக்கி எறிந்து காயப்படுத்தியுள்ளனர்.
அமைதியாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எமது உறவுகளை பலவந்தமாக தூக்கி எறிந்து அப்புறப்படுத்தியுள்ளது பிரித்தானிய பொலீஸ். எமது உறவுகளே உடனே உங்கள் வேலை அனைத்தையும் நிறுத்திவிட்டு பாராளுமன்றம் முன்பாக கூடவும்.
எமது பல உறவுகள் காயமடைந்துள்ள நிலையில் அங்கு தொடர்ந்தும் போராடிவருகின்றனர் அவர்களை நாம் கைவிடக்கூடாது. தோள்கொடுப்போம் , ஆகையால் விரைந்து வாருங்கள் உறவுகளே . இன்று மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதனால், அதற்கும் ஆயத்தமாக வாருங்கள்,
தொடர்ந்தும் அமைதிவழியில் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் ! அனைத்து பிரித்தானிய தமிழ் உறவுகளும் வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
யேர்மனி, பிரான்ஸ், சுவிசிஸ், நோர்வே, கனடா, பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு மக்களுக்கு அழைப்பு





|
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|