One moment please..
 
செய்தி
(2ம் இணைப்பு)
மெல்பேர்ண் தமிழ் உறவுகளின் பேரணி மீது சிங்கள காடையர்கள் கொலை வெறி தாக்குதல்: ஐந்து தமிழர்கள் படுகாயம்: ஏழு வாகனங்கள் சேதம்
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2009, 02:48.32 PM GMT +05:30 ]
அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் தமிழ்மக்கள் மேற்கொண்ட மகிழுந்து பேரணி மீது சிங்கள மக்கள் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் ஐந்து தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். தமிழ் மக்களின் ஏழுக்கும் மேற்பட்ட மகிழுந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

(வீடியோ பார்ப்பதற்கு (VIDEO) வீடியோ என்ற படத்தின் மேல் அழுத்தவும்)

இன்று சனிக்கிழமை பிற்பகல் மெல்பேர்ண் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மெல்பேர்ணில் இன்றைய தினம் தமிழ் இளையோர் அமைப்பினால் மகிழுந்து பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே காவல்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டதன் பிரகாரம் தமிழ் மக்களின் மகிழுந்து பேரணி திட்டமிடப்பட்ட வீதிகளின் ஊடாக அமைதியாக சென்று கொண்டிருந்தது.

மகிழுந்துகளில்,

அவுஸ்திரேலியாவே தமிழ்மக்களை காப்பாற்று,

சிறிலங்கா அரசே படுகொலைகளை நிறுத்து,

விடுதலைப்புலிகள் எமது சுதந்திர போராட்ட வீரர்கள்

போன்ற பல்வேறுவகையான பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றைவிட சகல மகிழுந்துகளிலும் தமிழீழ தேசியக் கொடியும் தமிழீழ தேசியத் தலைவரின் படங்களும் ஓட்டப்பட்டிருந்தன.

இந்த பேரணி மெல்பேர்ண் நகரின் மையத்தின் ஊடாக சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவகையில் அடுத்தடுத்து தாக்குதலுக்கு உள்ளாயின.

இன்றைய தினம், மெல்பேர்ண் நகரில் விக்டோரியா நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக சிங்கள மக்கள் ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு குழுமியிருந்த மக்களே இவ்வாறு தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்தமை பின்னர் தெரியவந்தது.

பேரணி நகரின் மத்தியால் சென்று கொண்டிருந்தபோது பிற்பகல் 1.30 மணியளவில் சிங்கள மக்களின் பேரணியில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர், தமிழ் மக்களின் பேரணியில் சென்று கொண்டிருந்த மகிழுந்துகளை நிறுத்தி அவற்றின் மீது கூட்டம் கூட்டமாக ஏறி தடிகள் பொல்லுகளால் மிலேச்சத்தனமாக தாக்கத் தொடங்கினர்.

தமிழீழ தேசிய கொடிகளை பறித்து கிழித்து கால்களில் போட்டு மிதித்தனர். பதாகைகளை பறித்து கிழித்தெறிந்தனர். மகிழுந்துகளின் மீது காறி உமிழ்ந்தனர்.
மகிழுந்து கதவுகளை திறந்தும் உள்ளே இருந்தவர்களை தாக்கினர்.

தேசியக்கொடியை பறிக்கும்போது அதனைத் தர மறுத்தவர்களின் கைகளை மகிழுந்தின் ஜன்னலுடன் சேர்த்து வைத்து தாக்கினர். மகிழுந்துகளில் இருந்தவர்களின் புகைப்படக் கருவிகளும் பறித்து உடைக்கப்பட்டன.

சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழீழ தேசிய கொடிகள் தாக்குதலை மேற்கொண்ட காடையர்களால் பறித்துச் செல்லப்பட்டன. இந்த சரமாரியான தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பலர் காயங்களுக்குள்ளாகினர். சுமார் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் கடும் இரத்தக் காயங்களுக்குள்ளாகினர். இருவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக அம்புலன்ஸில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தமிழ் மக்களின் சுமார் ஏழுக்கும் மேற்பட்ட மகிழுந்துகள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பெருந்திரளாக வந்து திடீரென மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை சற்றும் எதிர்பாராத தமிழ் மக்கள், எந்த வன்முறைகளிலும் ஈடுபடாது நிலைமையை சுதாகரித்தவாறே தமது பேரணியை தொடர்ந்தனர்.

அங்கு தாக்குதல் மேலும் மோசமடையாமல் காவல்துறையினர் விரைந்து வருவதற்குள் பல அசம்பாவிதங்கள் இடம்பெற்று விட்டடன. இருந்தபோதும் நிலைமையின் கொடூரத்தை அறிந்து மேலதிக காவல்துறையினர் வந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தம்மாலான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டனர்.

இந்த தாக்குதல்களை பொறுத்துக்கொண்டு தமது பேரணியை தொடர்ந்த தமிழ்மக்கள் வீதி ஓரங்களில் நின்று தாக்குதல் நடந்த உறவுகளையும் சேர்த்துக்கொண்டு தமது பேரணி சேருமிடத்தை நோக்கி புறப்பட்டது. பிற்பகல் 4.30 மணியளவில் பேரணி சென்று சேருவதற்கு முன்னரே திட்டமிட்ட இடத்தை சென்றடைந்தது.

தமிழ் மக்கள் தாக்கப்பட்ட செய்தியை கேள்வியுற்ற பேரணியில் கலந்துகொள்ளாத மெல்பேர்ண் தமிழ் உறவுகள் உடனடியாக பேரணி முடிவடைந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். மெல்பேர்ண் வாழ் தமிழ் உறவுகளின் மீது தொடுக்கப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்தை திரித்து, தம்மை விடுதலைப்புலி பயங்கரவாதிகள் தாக்க வந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய சிங்கள அமைப்புகள் அதில் வெற்றியும் கண்டன.

ஆனால், உண்மை நிலைவரம் தொடர்பாக மெல்பேர்ண் தமிழ் இளையோர் அமைப்பு அவுஸ்திரேலிய ஊடகங்களை தொடர்பு கொண்டு முழு ஆதாரங்களுடன் சம்பவத்தை விளக்கி, பாதிக்கப்பட்டவர்களின் செவ்விகளையும் வழங்கியுள்ளது.

இதேவேளை, நொறுக்கப்பட்ட மகிழுந்து உரிமையாளர்கள் மற்றும் தாக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் சென்று முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தாம் துரித விசாரரணை செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை இன்று நடைபெற்ற “சுதந்திரத்துக்கான ஊர்திப்பவனி" க்கு ஆதரவாக வானத்திலே தனியார் விமானம் ஒன்று "சிறிலங்காவே தமிழர்களை கொல்வதை நிறுத்து-srilanka stop killings tamils" என்ற வாசகத்தை பறக்கவிட்டபடியே மெல்பேர்ண் நகரின் முக்கிய பகுதிகள் ஊடாக சுமார் 2 மணித்தியாலங்களாக தன்னுடைய பறப்பை மேற்கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்