One moment please..
 
செய்தி
வன்னியில் காயமடைந்துள்ள 25,000 பொதுமக்களையும் காப்பாற்றுமாறு சர்வதேசத்திடம் வேண்டுகோள்: கடற்புலிகள் தளபதி கேணல் சூசை
[ ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 10:14.13 AM GMT +05:30 ]
வன்னியில் சிறிலங்கா படையினரின் கண்மூடித்தனமான ஆட்லறித் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை எதுவுமின்றி சாவின் விளிம்பில் தவித்துக்கொண்டிருக்கும் 25,000 பொதுமக்களையும் காப்பாற்ற உதவுமாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் விசேட தளபதி கேணல் சூசை சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(ஓடியோ கேட்பதற்கு AUDIO என்ற படத்தின் மேல் அழுத்தவும்)

இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஊடாக இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். அப்பகுதியில் இருந்த மருத்துவமனை படையினரால் அழிக்கப்பட்டு மருத்துவர்களும் முற்றாக வெளியேறிய நிலையில் அங்கு காயமடைந்து பரிதவிக்கும் பொதுமக்கள் எதுவித சிகிச்சையுமின்றி இறந்துகொண்டிருக்கின்றனர்.

அத்துடன் பதுங்குகுழிகளுக்குள் ஆயிரக்கணக்கானோர் மண்ணினால் புதையுண்ட நிலையில் இறந்துள்ளனர். ஆங்காங்கே சிதறிய நிலையில் கிடக்கும் இறந்தவர்களின் உடலங்களை படையினரின் தொடர்ச்சியான தாக்குதல்களினால் அடக்கம்கூட செய்ய முடியாத அவலநிலைக்கு வன்னிப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக பதுங்குகுழிகளுக்குள்ளேயே பலர் தங்கியிருப்பதால் உணவு, நீர் கூட அருந்தாமல் பட்டினியால் பெரும் எண்ணிக்கையானவர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த நிலையில் உயிருக்காக பரிதவிக்கும் பொது மக்களை, மீட்பதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.அவர்களை வட்டுவாகல் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளின் ஊடாக மீட்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சடலங்கள் சிதறிக்கிடக்கின்ற சுமார் இரண்டு கிலோமீற்றர் நிலப்பரப்புள்ள பகுதியில், பொதுமக்கள் பலர் பதுங்கு குழிகளில் மறைந்துள்ள நிலையில் இராணுவம் அனைத்து வகையான ஆயுதங்களையும் பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இராணுவம் பொது மக்களை மீட்காது, பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்பி வரும் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

25000 பேர் காயமடைந்து செத்துக் கொண்டிருக்கும் போதும், சர்வதேச சமூகம் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் 50ஆயிரம் மக்களை தாம் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளபோதும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் காயமடைந்துமுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவிக்கின்றனர். தற்போது இருதரப்பும் மிக அண்மித்த தூரத்தில் நின்று துப்பாக்கிச் சமர் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த இறுதித் தருணத்திலாவது, அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, இறுதியாக வன்னியில் இருந்து கிடைத்த தகவல்களின் படி, பாதுகாப்பு வலய பிரதேசத்தில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை இராணுவத்தினர் தடுத்து வைத்துள்ளனர். அவர்கள் மீது துப்பாக்கி பிரயோத்தை நடத்தி வருவுதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை கடந்த சில மணிநேரத்தின் முன்பு கேணல் சூசை தமக்கு தெரிவித்த தகவல்களை, தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகார உறவு பொறுப்பாளர் பத்மநாதன் தமிழ் மக்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சர்வதேசத்திடம் அறிக்கை மூலம் கேட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் பத்மநாதன் தெரிவிக்கையில் இன்றைய தருணத்தில் இதுதான் தேவை. இதன் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுடைய உயிர்களைப் பாதுகாக்க முடியுமாயின் அது செய்யப்பட வேண்டும்.

எமது மக்களுக்காகவேதான் நாம் போராடுகின்றோம் என்பதை நாம் மறந்துவிடவில்லை. தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில், எமது மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கு இந்த போரை சிங்கள அரசு பயன்படுத்துவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது.

நாம் எமது துப்பாக்கிகளை மெளனிப்பதற்கு தயாராவிருக்கின்றோம். எமது மக்களைப் பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் தொடர்ந்தும் கோருவதைவிட எம்மிடம் வேறு தெரிவுகள் எதுவும் இல்லை." இவ்வாறு பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முள்ளிவாய்க்கால் பகுதியை முற்றாகக் கைப்பற்றி இருப்பதாகப் பிரசாரம் மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசாங்கம், அந்தப் பகுதியில் எஞ்சியிருந்தவர்கள் சரணடைய அவகாசம் வழங்காது பாரிய இன அழிப்பை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதற்கான தாக்குதல்கள் நாலாபுறமும் இருந்து மேற்கொள்ளப்படு வருகின்றன.

இதனைத் தடுப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் கால தாமதம் அடைந்தால், பல்லாயிரக்கணக்கான மக்கள் சாட்சியின்றி இனப் படுகொலை செய்யப்படலாம் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்