One moment please..
 
செய்தி
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்து
[ புதன்கிழமை, 27 மே 2009, 02:22.45 AM GMT +05:30 ]
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இரு தரப்புகளும் யுத்தத்தின் போது மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற அடிப்படைக் கொள்கைகளை கடுமையாக மீறியுள்ளனர் என நம்புவதற்கு வலிமையான சான்றுகள் உள்ளன. இவ்வாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கவுன்ஸிலில் இலங்கை குறித்து நேற்று நடைபெற்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசியவை வருமாறு:

சமீபத்தில் இலங்கையில்மீறப்பட்ட சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து தீவிரமாக ஆராய்வதற்கும், இவை எவ்வாறு நடந்தன, எவ்வளவு மோசமாக இடம்பெற்றுள்ளன, இவற்றுக்கு யார் காரணம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு சுயாதீனமான நம்பகத் தன்மையுடைய சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

இரு தரப்புகளும் யுத்தத்தின் போது மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற அடிப்படைக் கொள்கைகளை கடுமையாக மீறியுள்ளனர் என நம்புவதற்கு வலிமையான சான்றுகள் உள்ளன.

அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுத்தனர். அத்துடன் அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்.

இலங்கை அரசு பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியது. சரணடைய வந்த போராளிகளை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர் என்பன எமக்கு கவலையளிக்கின்றன என்றார்.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்