One moment please..
 
கட்டுரை
தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் இலங்கை அரசு
[ ஞாயிற்றுக்கிழமை, 13 செப்ரெம்பர் 2009, 05:48.33 AM GMT +05:30 ]
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹனவுக்கு பிரித்தானியா விஸா வழங்க மறுத்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தனிப்பட்ட ரீதியில் விஸாவுக்கு விண்ணப்பித்ததால் தான் நிராகரிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறது பிரித்தானியத் தூதரகம்.

ஆனால் அவருக்கு விஸா நிராகரிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார் வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் ரோகித போகொல்லாகம. எது எவ்வாறாயினும், இது சர்ச்சைகளைக் கிளப்பியிருப்பது உண்மை. இலங்கை அரசாங்கத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் அண்மைக் காலமாக இராஜதந்திர உறவுகள் சீராக இருக்கவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்ற விவகாரத்திலும், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என்ற விவகாரத்திலும், மனித உமைகளைப் பேண வேண்டும் என்பதிலும் பிரித்தானியா அடிக்கடி ஆலோசனைகளையும் கருத்துகளையும் கூறி வந்தது.

உதவி கேட்டுக் கைநீட்டுவதையும் உபதேசம் செய்தால் உதறித் தள்ளுவதையும் வழக்கமாகக் கொண்ட இலங்கை அரசுக்கு இது பிடிக்கவில்லை.

அதுமட்டுமன்றி, பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் கே.பியின் பேட்டி ஒளிபரப்பானது, இராணுவத்தினரால் தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கப்படும் காட்சி ஒளிபரப்பானது, வவுனியா தடுப்பு முகாம் அவலங்கள் படம் பிடிக்கப்பட்டமை என்பன பிரித்தானியா மீது இலங்கைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை அரசின் செயற்பாடுகள் மீது பிரித்தானியாவுக்கு இருந்து வந்த வெறுப்பு சட்டமா அதிபர் மொகான் பீஸ் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா போன்றோருக்கு விஸா வழங்க மறுக்கும் அளவுக்கு விரிவடைந்தது.

இந்த நிலையில் பிரித்தானிய விஸாவைப் பெறாத ஒரு தமிழ்ப் பெண்ணை தூதரக அதிகாகள் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் இலங்கை அரசுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை பாரதூரமான தொரு குற்றம் போலவே இலங்கை அரசு அணுகியிருந்தது.

இதுபற்றி பிரித்தானியத் தூதரகத்திடம் கண்டனம் தெரிவித்ததுடன் விளக்கம் கோரியது வெளிவிவகார அமைச்சு.

இதன் தொடர்ச்சியாகவே பாலித கோஹனவுக்கு விஸா வழங்க பிரித்தானியா மறுத்திருக்கிறது.

இந்த விடயத்தில் எந்த அரசியல் காழ்ப்புணர்வும் வெளிப்படுத்தப்படவில்லை என்று பிரித்தானியா தெரிவித்திருந்தாலும் அது பெரிதாக எடுபடவில்லை. இலங்கை அரசுக்கு இந்த விவகாரம் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மைக் காலத்தில் இலங்கை அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளை சர்வதேச சமூகம் மதிப்புடன் நடத்தவில்லை.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு விஸா வழங்க கனடா மறுத்திருந்தது. ஆளும் கட்சி எம்.பியான அர்ஜுன ரணதுங்கவுக்கு விஸா வழங்க பிரித்தானியா மறுத்தது.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஜப்பானில் சாதாரண பயணி போல நடத்தப்பட்டு நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வைக்கப்பட்டார்.

இப்படியான சம்பவங்கள் இலங்கை அரசுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருபுறத்தில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்த அரசு என்று பெருமைப்படும் அரசாங்கம் உலகமே தமக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற கருத்துடன் இருந்தது. ஆனால் அதற்கு மாறான உபசரிப்புகள் கிடைப்பதால் அரசாங்கம் திக்குமுக்காடத் தொடங்கியிருக்கிறது.

புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைக்கு ஆதரவு கொடுத்த சில நாடுகள் இப்போது அதற்குத் துணைவரத் தயாராக இல்லை.காரணம் இலங்கை அரசின் போக்கில் அந்த நாடுகள் அதிருப்தியடைந்திருக்கின்றன.

மனித உமை விவகாரங்களில் இலங்கை அரசு சர்வதேசத்தைத் திருப்திப்படுத்தத் தவறி விட்டது.

இதன்காரணமாக சர்வதேச சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிலைக்கு அரசாங்கம் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக பாலித கோஹனவுக்கு விஸா மறுக்கப்பட்ட விவகாரம் சாதாரணமானதொன்றல்ல.

வெளிவிவகார அமைச்சருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் அமைச்சின் செயலாளர்.

பொதுவான இராஜதந்திர நடைமுறைகளின்படி அவருக்கு விஸா வழங்குவதற்கு எந்த விசாரணைகளும் தேவைப்படாது.

பனிப்போர் காலத்தில் துருவங்களாக இயங்கிய நாடுகளும், இந்தியா - பாகிஸ்தான் போன்ற நாடுகளின் இராஜதந்திரிகளுக்கே இப்படியான சிக்கல்களை கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கின்றன.

இலங்கைக்கு இது புதியதொரு அனுபவம். இலங்கையின் வெளிவிவகார செயலாளருக்கு விஸா மறுக்கப்பட்டதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக இது கையாளப்பட்டிருக்கலாம்.

சனல் 4  விவகாரத்தில் பிரித்தானியாவுடன் இலங்கை அரசாங்கம் முட்டி மோத முனைந்தது, யுனிசெப் பிரதிநிதியை வெளியேற்றும் உத்தரவு போன்றன இலங்கைக்கு புதிய சிக்கல்களாக உருவெடுத்து வருகின்றன.

இந்த நிலையில் மனிதஉமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதும், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சயான தீர்வைக் காண முயற்சிப்பதுமே சர்வதேச அரங்கில் இலங்கை அரசைக் காப்பாற்றும் என்பது உறுதியாகியிருக்கிறது.

ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்த முடியாதென்ற போக்கில் உறுதியாக இருக்கிறது அரசு.

எந்தவொரு வெளிநாட்டு நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என்று கூறிக் கொண்டு சர்வதேசத்துடன் மோதுவது இலங்கை அரசுக்கு இராஜதந்திர ரீதியில் மேலும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

அத்துடன் சர்வதேச நிதியுதவிகளை இழக்கின்ற நிலையும் ஏற்படலாம்.

இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் வர்த்தகச் சலுகை நீடிப்பு கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கூட தடைப்படும் ஆபத்தை உருவாக்கலாம்.

அரசாங்கத்தின் போக்கில் மாற்றங்கள் தென்படாத வரையில் சர்வதேசத்தின் அணுகுமுறைகளில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

பிடிவாதப் போக்குடன் இருக்கும் அரசு வரட்டுக் கௌரவத்துக்காக சர்வதேசத்துடன் மோதத் துணிவது சாதாரண மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்