|
|
|
|
| பொய்யென நிரூபிக்க சிறிலங்கா அரசு பயன்படுத்திய வீடியோ போலியானது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 13 செப்ரெம்பர் 2009, 08:51.01 AM GMT +05:30 ] | |
ஓகஸ்டில் சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ பொய்யானது என அரசு கூறுகிறது. அது பொய்யானது, சித்தரிக்கப்பட்டது என்றெல்லாம் கூறும் சிறிலங்கா அரசு அதை விஞ்ஞான ரீதியாக நிரூபித்துள்ளதாகவும் கூறுகிறது. |
|
ஆனால் இவ்வாறு பொய்யென நிரூபிப்பதற்காக அரசு உண்மையான வீடியோவைப் பயன்படுத்தவில்லை.
அதாவது கைத்தொலைபேசியால் எடுக்கப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டதைத் தாம் பதிவு செய்து அந்த வீடியோவையே பயன்படுத்தி தமது நிரூபித்தல்களைச் செய்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன அழிப்புக்கு எதிரான் தமிழர்கள் மேற்கொண்ட ஆய்விலிருந்தே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக இன அழிப்புக்கு எதிரான அமைப்பு அமெரிக்க நிபுணர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
அமெரிக்க நிபுணர்கள் கொடுத்த ஆரம்பகட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்களாவன,
ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட வீடியோ .gp3 கோப்பாகும். ஆனால் சனல் 4 உட்பட அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் பயன்படுத்தியது வலை- ஒளிபரப்பு பதிவு என்னும் மாற்றப்பட்ட வடிவமாகும். அதாவது H263 (.gp3) வடிவத்திலிருந்து Flash-9, 10 இல் இயக்கக்கூடிய .avi வடிவமாக மாற்றப்பட்ட H264 வடிவத்தையே அரசு பயன்படுத்தியுள்ளது. ஒளி, ஒலி என்பவை சரியாக ஒத்திசையவில்லை என இலங்கையரசு சுட்டிக்காட்டியிருந்தது. இது இவ்வாறு வடிவம் மாற்றப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தியதால் தோன்றியது எனக் கூறுகின்றனர் அமெரிக்க நிபுணர்கள்.
ஆனால் கைத்தொலைபேசி .gp3 வீடியோ எடுக்கப்பட்டது ஜூலை 18 எனப் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோ ஜனவரி மாதத்தில் ஒரு இராணுவ வீரரால் எடுக்கப்பட்டதென ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பு கூறுகிறது. இந்த திகதிச் சிக்கலைத் தீர்ப்பது பற்றியும் தாம் சிந்தித்து வருவதாக இன அழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பு கூறியுள்ளது. |
|
|
|
|
| காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்! |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ] |
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்] |
| சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல் |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ] |
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்] |
| சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ] |
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்] |
| பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ] |
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] |
| தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு |
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] [ ] |
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|