Switch to
   
   
   
செய்தி
பிரான்ஸ் ஊடாக ஜெனிவா வரை நடைபயணத்தை மேற்கொள்ளும் சிவந்தனுக்கு எமது ஆதரவு: தமிழீழ மக்கள் பேரவை-பிரான்ஸ்
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 02:11.45 AM GMT +05:30 ]
1983 ஆடி மாதம் கறுப்பு ஜூலை அன்று நடைபெற்ற இனஅழிப்பை நினைவு கூறும் பிரான்ஸ் தமிழ்ப் பேரைவையினராகிய நாம், ஐ.நா.வினால் அமைக்கப்பட்ட மதியுரைக் குழுவை மனதார வரவேற்கிறோம்.

2000 வருடங்களுக்கு மேலாக வேரூன்றி நிற்கும் ஒரு இனம் இன்றைய நிலையில் ஒரு உரிமையும் அற்றதாக ஆக்கப்பட்டது. 1958, 77, 83, 86, 96, 2006, 2009 ஆகியவை இலங்கைத் தமிழரால் மறக்க முடியாத வருடங்களாக உள்ளன. முன்பு தமது நிர்வாகத்தை வகுப்பதற்கு ஒருமித்த ஆட்சியை வகுத்த காலனித்துவ அரசினரால் தமிழினத்தின் ஆட்சி சிதைக்கப்பட்டு, இன்று தனது குடிமக்களில் ஒரு பகுதியினரின் குடியுரிமையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும் ஒரு நிலைமை உருவாகியுள்ளது.

ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகள் ஆகிய நிலம், மொழி, கலாச்சாரம் ஆகிய யாவும் இன்று அழிக்கப்பட்டு வருகின்றன. ஒரு தேசிய, இன, மொழியாலான குழுவை முழமையாகவோ பகுதியாகவோ திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் அழிப்பது இனஅழிப்பு ஆகும்.

இனஅழிப்புப் பற்றிய வரைவிலக்கணங்களில் பல் வகைகள் இருப்பினும், 1948இல் ஐ.நா.சபையில் இனஅழிப்பைத் தடுத்துத் தண்டிக்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட சட்டத்தின் 2வது பிரிவின்படி மேற்கூறப்பட்ட ஒரு குழுவின் அங்கத்தவரைக் கொல்லுதல், அவர்களின் உடலையோ மனதையோ காயப்படுத்தல், அவர்களுடைய வாழ்க்கையை முழுதாகவோ பகுதியாகவோ சீரழிப்பதற்கு ஏதுவான சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கல், அவர்களின் சந்ததி வளர்ச்சியைத் தடுத்தல், பலாத்காரமாகப் பிள்ளைகளை ஒரு குழுவிலிருந்து வேறொருகுழுவுக்கு மாற்றுதல் ஆகிய அனைத்தும் இனஅழிப்பின் வரைவிலக்கணத்துள் அடங்கும்.

பொதுவாகக் கூறின் இனஅழிப்பு என்றால் ஒரு இனம் முழுவதும் உடனே அழிக்கப்படுவது (எல்லா மக்களையும் ஒரே நேரத்தில் அப்படி அழித்தாலொழிய) அல்ல. வாழ்க்கையில் தேவையான அம்சங்களைத் திட்டமிட்டு வௌ;வேறு செயல்களால் ஒரு குழுவை நிர்மூலமாக்குவதற்குச் செய்யப்படும் நடைமுறைகள் இனஅழிப்பாகும். அவற்றின் குறிக்கோள், அக்குழுவின் அரசியல், சமூக, மொழி, தேசிய, உணர்வுகளையும், பொருளாதார இருப்பையும் பிரிவு படுத்தி அதன் தனிமனித பாதுகாப்பு, விடுதலை, சுகாதாரம், தன்மானம், உயிர்வாழ்தல் ஆகியவற்றை அழிப்பதும் எனலாம்.

ஐக்கிய நாட்டின் அமைப்பில் பணி புரிந்து, ஈழப்போர் முடிவுற்றபின் இராஜினாமாச் செய்த கார்டன் வெயிசின் கூற்றுப்படி, யுத்தத்தின் இறுதி நாட்களில் 40,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன், சாட்சிகளாகப் பெற வேண்டியவர்கள் (உயிருடன்) புதைக்கப்பட்டு மவுனிக்கப்பட்டதில் இருந்து, போர்க்குற்றங்களும் இனஅழிப்பும் 1948 முற்பகுதியில் இருந்து இலங்கை அரசால் நடத்தப்பட்டமை புலனாகின்றது.

இன்று, சர்வதேச சமூகம் இலங்கை அரசைத் தனது சொந்த விசாரணைக் குழுவை அமைக்கும்படி கேட்கின்றது. ஒரு நாடு நேரத்தை வீணடிக்கும் பொருட்டுச் செய்யும் முதல் வேலை விசாரணைக் குழுக்களை அமைப்பதாகும். இலங்கை அரசு இதற்குப் பேர் போனது எனலாம். உதாரணமாக 17 பிரெஞ்சு அரசு சார்பற்ற ஊழியர்களின் கொலை விசாரணைக் குழுவின் விதி என்பது உலகறிந்த விடயம்.

ஐக்கிய நாட்டு மதியுரைக் குழுவை வரவேற்கும் அதே நேரத்தில் ஐ.நா.சபை அதற்கு மேல் சுயாதீனமாக இயங்கும் விசாரணைக் குழுக்களை அமைத்து, இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் இழைக்கப்பட்ட எல்லா அநீதிகளையும் பற்றி அரசியல்வாதிகள் உட்பட அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு நாம் வேண்டுகிறோம். இத்தகைய குற்றங்கள் ஜனவரி, 2009இல் இருந்து மே, 2009 வரை மாத்திரம் நிகழ்த்தப்பட்டவை அல்ல. இலங்கையின் சுதந்திரம் முதல் 62 வருடங்களுக்கு இவை தொடர்பாகப் புரியப்பட்டன என்பது முக்கியம்.

இதைக் குறிக்கோளாகக் கொண்டு, தமிழ் மக்களுக்கு நீதி கோரி, உலகளாவிய தமிழ் மக்களின் இதயங்களில் இன்னும் உறுத்திக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் (23 ஜூலை) இலண்டனில் இருந்து தொடங்கி பிரான்ஸ் ஊடாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா.சபை வரை நடைபயணத்தை மேற்கொள்ளும் இளைஞர் சிவந்தனுக்கு எமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.

தமிழ் மக்கள் பேரவை பிரான்ஸ்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சித்திரவதைக்குள்ளான ஆரியவதிக்கு ஆவிப் பிரச்சினையாம்: சவூதி சென்ற குழுவினர் தகவல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 09:28.06 AM ]
சவூதி அரேபியாவில் ஆணி அறையப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் ஆரியவதி தொடர்பில் தற்போது சவூதி அரேபியாவில் வேறு விதமான கருத்தே நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
கட்டுநாயக்கவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் பலி
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:54.35 AM ]
கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இரண்டு உயர்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
வெள்ளையனை நோக்கி பூலித்தேவன் பாய்ந்தார்! சிங்களவனை நோக்கி பிரபாகரன் பாய்ந்தார்!: காசிஆனந்தன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:20.19 AM ]
வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை?எத்தனை? இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார். [மேலும்]
(2ம் இணைப்பு)
வெற்றிச்சரிதம் படைக்க ஜேர்மனியில் ஒன்றுதிரளட்டும் உலகத்தமிழினம் - வைகோ
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:27.27 AM ] []
நேற்றைய வரலாறு, இன்றைய அவலங்கள், நாளைய விடியல் இவை பற்றிச் சிந்திக்கவும், செயற்திட்டங்களை வகுக்கவும் வியூகங்கள் அமைக்கவும் வெற்றிச்சரிதம் படைக்கவும் ஜேர்மனியில் நடைபெறும் உ.த.ப.இயக்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைபெறும் மாநாட்டுக்கு வைகோ விடுத்துள்ள வாழ்த்தறிக்கை. [மேலும்]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement