Switch to
   
   
   
செய்தி
தீர்வுக்கு முன்னர் நல்லிணக்கம் என்பது குதிரைக்கு முன்னால் வண்டியை நிறுத்துவது போன்றது: பிளேக்கிடம் தமிழ்க் கூட்டமைப்பு
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 01:47.18 AM GMT +05:30 ]
அரசியல் தீர்வுக்கு முன்னதாக இன நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதானது குதிரைகளுக்கு முன்னால் வண்டியை நிறுத்துவது போன்றதாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக்கிடம் கூறியுள்ளது.

கடந்த புதன்கிழமை கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்காவின் தெற்கு, மத்திய, ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். இச்சந்திப்பின் போதே அவர்கள் இக்கருத்தைத் தெரிவித்ததாக அறியவருகிறது.

இன ரீதியான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு அரசியல் தீர்வொன்றே வழிசமைத்துக் கொடுக்கும் என்று தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் ரொபேர்ட் பிளேக்கிடம் கூறியுள்ளனர். அரசியல் இணக்கப்பாட்டிற்கான எந்தவொரு யோசனைகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்வைத்திருக்கவில்லை எனவும் யுத்தம் முடிவடைந்து ஓராண்டுக்கும் மேல் சென்றுவிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

அத்துடன், வடபகுதியில் ஆயுதப் போராட்டம் முடிவடைந்திருக்கின்ற போதிலும் அப்பகுதியை இராணுவ மயமாக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துவருவதாகவும் ரொபேர்ட் பிளேக்கிடம் அவர்கள் முறைப்பாடு தெரிவித்ததாக அறியவருகிறது.

இது இவ்வாறிருக்க இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதையிட்டு அமெரிக்கா கவலைப்படவில்லையென ரொபேர்ட் பிளேக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஏனைய அரசியல், வர்த்தக தலைவர்களை கடந்த புதன்கிழமை சந்தித்த பின் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஒவ்வொருவரினதும் தேசிய மட்டத்திலான அபிலாஷைகளை அமெரிக்காவும் சீனாவும் அறிந்துகொண்டிருப்பதாகவும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விடயங்கள் குறித்து சீன வெளிவிவகார அமைச்சருடன் தான் கலந்துரையாடி இருப்பதாகவும் பிளேக் கூறியுள்ளார்.

அதேசமயம், ஈரானுடனான இலங்கையின் பிணைப்புகள் தொடர்பான விவகாரத்தை ராஜபக்ஷவுடன் தான் கதைத்திருப்பதாகவும் பிளேக் கூறியுள்ளார். ஈரான் தொடர்பான அமெரிக்காவின் கவலைகள் குறித்து இலங்கைத் தலைவர்கள் அறிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஈரான் தொடர்பான ஐ.நா.பாதுகாப்புச் சபையின் தீர்மானங்கள் பற்றி இலங்கைத் தலைவர்களுக்குத் தெரிந்திருப்பது குறித்தும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
"அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்]
ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்]
உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு  வாழ்த்தறிக்கை  ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்]
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] []
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement