Switch to
   
   
   
செய்தி
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய உறவு: கெஹலிய பெருமிதம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 01:25.28 AM GMT +05:30 ]
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் நெருக்கமான மற்றும் சுமுகமான உறவு காணப்படுகின்றது. அந்த நெருக்கமான நட்புறவின் அடிப்படையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வாராயின் அவரை நாங்கள் வரவேற்போம் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டபோது தமிழகத்தின் 21 எம்.பி. க்களுக்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை நிலைவரத்தை நேரில் கண்டறிந்து ஆய்வு செய்வதற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கொழும்பு செல்லவுள்ளார் என, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளமை குறித்து அரசாங்கம் சார்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை நிலைவரத்தை ஆய்வுசெய்வதற்கு, மத்திய அரசு சிறப்புப் பிரதிநிதியை அனுப்பவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், முதல்வர் கருணாநிதி அண்மையில் கோரியிருந்தார். இதற்குப் பதிலளித்து பிரதமர்,மு தல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கொழும்பு செல்லவுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நிலைவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கொழும்பு செல்லவுள்ளதாகவும் அந்த அதிகாரி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடனும், வட. கிழக்குப் பகுதிகளிலும் நேரில் சென்று ஆய்வுசெய்யவுள்ளார் என்றும் பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது:

இந்தியாவின் பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இடம்பெயர்ந்தோர் நிலைமை தொடர்பில் ஆராயலாம். மேலும் இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுக்களை நடத்தலாம். ஆனால் இவை இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுக உறவின் அடிப்படையில் இடம்பெற வேண்டும். காரணம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் நெருக்கமான மற்றும் சுமுகமான உறவு காணப்படுகின்றது. அதாவது மிக நெருங்கிய நட்புறவு காணப்படுகின்றது என்று கூற முடியும்.

நாங்கள் அடிக்கடி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இந்நிலையில் தமிழக முதல்வர் இவ்வாறான கோரிக்கை ஒன்றை இந்திய பிரதமரிடம் விடுத்துள்ளார். அதன் படி பிரதமர் மன்மோகன் சிங் வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியை அனுப்புவதாக அறிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற நட்புறவின் அடிப்படையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி வருகை தரலாம். நிலைமைகளை ஆராயலாம். அதனை எமது அரசாங்கம் வரவேற்கும். அதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் கிடைக்கும். காரணம் இந்த விஜயம் சுமுக உறவின் அடிப்படையில் இடம்பெறுவதாகும்.

அதனைவிடுத்து இலங்கைக்கு பலவந்தமாக பருப்பு போட்டதைப் போன்றதல்ல என்பதனை வலியுறுத்த வேண்டும்.

இதேவேளை அண்மையில் இந்தியாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் மேற்கொண்டிருந்தபோது தமிழக எம்.பி. க்கள் 21 பேர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத் திருந்தார்.




பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
"அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்]
ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்]
உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு  வாழ்த்தறிக்கை  ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்]
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] []
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement