Switch to
   
   
   
செய்தி
விஜயகலா மகேஸ்வரன் அரசுடன் இணையவுள்ளாரா?
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 02:04.14 AM GMT +05:30 ]
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான முன்முயற்சி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவினால் எடுக்கப்பட்டதாகவும் இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக யாழ் செல்லும் அரசாங்க அமைச்சர்கள் விஜயகலா மகேஸ்வரனைச் சந்திப்பதை வழமையாக்கிக் கொண்டுள்ளதாகவும் தமது உத்தியோகபூர்வ விஜயங்களில் விஜயகலா மகேஸ்வரனையும் இணைத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த முயன்று வரும் பசில் ராஜபக்ச யாழ் மாவட்ட சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை விஜயகலா மகேஸ்வரனுக்கு வழங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது விஜயகலா மகேஸ்வரன் பேசுவதற்கு பசில் ராஜபக்சவும், நாமல் ராஜபக்சவும் தமது நேரங்களிலிருந்து 10 நிமிடங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் நடைபெற்ற மஹிந்த -  ரணில் சந்திப்பின்போது கட்சித்தாவல்களுக்கு எதிராக இணக்கமான ஒரு தீர்மானம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
"அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்]
ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்]
உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு  வாழ்த்தறிக்கை  ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்]
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] []
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement