Switch to
   
   
   
செய்தி
இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக தனி மாகாண கோரிக்கை : ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 05:02.40 AM GMT +05:30 ]
இந்திய வம்சாவளி தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற மலையகத்தின் பதுளை மாவட்டத்தையும், நுவரெலியா மாவட்டத்தையும் ஒன்றிணைத்து ஒரே மாகாணமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கவிருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த யோசனையை எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ள மலையக தமிழ் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பின் போது முன்வைக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உருவாக்கப்படும் நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை போல இது மலையக தமிழ் மக்களுக்கான தனி மாகாணமாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மலையகத்தில் தனியான மாகாண சபை, பிரதேச செயலகங்கள் என்பன உருவாக்கப்படுவதன் ஊடாக மலைய தமிழ் மக்களுக்கான சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை ஒன்றிணைத்து ஒரே மாகாணமாக்கும் திட்டத்தை முதன் முதலில் மலையக மக்கள் முன்னணி கடந்த 1994ம் ஆண்டு முன்வைத்தது.

கட்சியின் உபத்தலைவர் அ. லோரன்ஸின் தகவல்படி, இது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்வைத்த அரசியல் திருத்த யோசனைகளின் போதும் தமது கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கான அனுமதி கிடைக்கப்படும் பட்சத்தில் மலையக மக்களுக்கு கிடைக்கின்ற சிறந்த வரப்பிரசாதமாக அது அமையும் என அ.லோரன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
"அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்]
ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்]
உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு  வாழ்த்தறிக்கை  ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்]
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] []
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement