Switch to
   
   
   
செய்தி
கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஜோதிரவி என்பவரை மீண்டும் திருப்பியழைக்குமாறு கோரிக்கை
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 06:48.12 AM GMT +05:30 ]

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ஏ.கே. கண்ணன் என அழைக்கப்படும் ஜோதிரவி சிற்றம்பலம் என்ற 40 வயதுடைய நபர் இலங்கை அரசின் துன்புறுத்தலிற்கு உள்ளாகியுள்ளதால் அவரை கனடாவிற்குத் திருப்பியழைக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென கனடிய உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி ஜோதிரவி சிற்றம்பலம் சார்பாக வாதாடும் பிரபல சட்டத்தரணியான திருவாட்டி பார்பரா ஜக்மன் அவர்களால் தொடுக்கப்பட்டுள்ள இவ்வழக்கு கனடிய அரசின் இரண்டு அமைச்சர்களை குறிவைத்தே நகர்த்தப்படுகிறது எனத் தெரியவருகிறது.

இந் நபர் நாடுகடத்தப்படுவதற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு கனடியக் குழு இந்நபர் நாடுகடத்தப்படுமிடத்து அவரிற்கு அங்கு தீங்கு ஏற்படாது என்பதை தங்கள் பரிந்துரையாக கொடுத்திருந்ததது. அதனடிப்படையில் செயற்பட்ட கனடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி, மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பமைச்சர் விக் ரோவ்ஸ் ஆகியோர் இந்த நாடுகடத்தலிற்கான அனுமதியை வழங்கினர்.

எனினும் இவ்வாறு நாடுகடத்தப்பட்ட சிற்றம்பலம் யோதிரவி  இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற பிரத்தியேக செய்தியை தமிழ்வின் யூன் 28ம் திகதி வெளியிட்டிருந்தது.

கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஜோதிரவி சிற்றம்பலம் தனது சொந்த ஊரான கரவெட்டி செனறு தன்னை மீள் வாழ்க்கை உட்படுத்தி வந்த போதே கொழும்பில் இருந்து சென்ற சிறப்புப் பொலிஸ்படையால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு 4ம் மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என்பதையே தமிழ்வின் தனது பிரத்தியேக செய்தியில் எடுத்து வந்திருந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் உண்மையென்பதை உறுதிப்படுத்தியுள்ள மேற்படி நபரின் சட்டத்தரணி மேற்படி அமைச்சர்கள் இருவரும் முன்யோசனையற்ற அல்லது விவேகமற்ற முறையில் இந்த விவகாரத்தில் செயற்பட்டிருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜோதிரவியும், அவரது தந்தையும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், ஜோதிரவி நான்காம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவால் விடுதலைப்புலிகளிற்கு பணம் சேர்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டார் எனவும் மேற்படி சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மேலும் கனடாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்த குழு, இலங்கை அரசு இந் நபரை விடுதலைப்புலிகளிற்கு பணம் சேகரித்த ஒரு நபராகக் குற்றஞ்சாட்டிய தகவலை அமைச்சர்களிற்கு வழங்குவதற்குத் தவறி விட்டார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை  சம்பந்தப்பட்ட நாடு கடத்தல் விவகாரமொன்றில் தீர்க்கமான முடிவிற்கு இட்டுச் செல்லக்கூடியதாக இவ்வழக்கு விசாரணை அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீதிமன்று ஜோதிரவிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கினால் மேற்படி அமைச்சர்கள் இருவரின் அரசியல் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதோடு ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டை குடிவரவுத் திணைக்களம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியேற்படும் எனவும் தெரிய வருகிறது.

அதேநேரம் கனடாவில் உள்ள தனது மனைவியுடன் ஜோதிரவி தொலைபேசியில் உரையாடுவதற்கு அனுமதிக்கப்படுகின்ற போதிலும் பொலிஸாரின் பிரசன்னத்தின் மத்தியிலேயே அவர் இதற்கு அனுமதிக்கப்படுவதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சித்திரவதைக்குள்ளான ஆரியவதிக்கு ஆவிப் பிரச்சினையாம்: சவூதி சென்ற குழுவினர் தகவல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 09:28.06 AM ]
சவூதி அரேபியாவில் ஆணி அறையப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் ஆரியவதி தொடர்பில் தற்போது சவூதி அரேபியாவில் வேறு விதமான கருத்தே நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
கட்டுநாயக்கவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் பலி
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:54.35 AM ]
கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இரண்டு உயர்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
வெள்ளையனை நோக்கி பூலித்தேவன் பாய்ந்தார்! சிங்களவனை நோக்கி பிரபாகரன் பாய்ந்தார்!: காசிஆனந்தன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:20.19 AM ]
வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை?எத்தனை? இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார். [மேலும்]
(2ம் இணைப்பு)
வெற்றிச்சரிதம் படைக்க ஜேர்மனியில் ஒன்றுதிரளட்டும் உலகத்தமிழினம் - வைகோ
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:27.27 AM ] []
நேற்றைய வரலாறு, இன்றைய அவலங்கள், நாளைய விடியல் இவை பற்றிச் சிந்திக்கவும், செயற்திட்டங்களை வகுக்கவும் வியூகங்கள் அமைக்கவும் வெற்றிச்சரிதம் படைக்கவும் ஜேர்மனியில் நடைபெறும் உ.த.ப.இயக்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைபெறும் மாநாட்டுக்கு வைகோ விடுத்துள்ள வாழ்த்தறிக்கை. [மேலும்]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement