Switch to
   
   
   
செய்தி
கடந்த இரண்டு ஆண்டுகளில் 1141 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளனர்
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 02:24.52 PM GMT +05:30 ]
கடந்த இரண்டு ஆண்டுகளில் 1141 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளதாக அந்நாட்டு புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்தவர்கள் என அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் படகுகளின் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த 840 பேரில் 740 பேர் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு இதுவரையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடம் வழங்கத் தவறியுள்ளது.

அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தொடர்ச்சியாக குறித்த நபர்களிடம் விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] []
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:40.49 PM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு அதிகாரத்துடன் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  சீர்திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. [மேலும்]
பாராளுமன்ற முன்றலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டக் காட்சிகள்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 12:56.28 PM ] []
உத்தேச 18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்]
புளொட்- புலிகள் மோதலும் அதனை வேடிக்கை பார்த்த இந்தியப் படையும்: உண்மையின் தரிசனம் (பாகம்-17)
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:29.07 AM ] []
இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு மீண்டும் வந்த புளொட் அமைப்பு வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முகாம்களை அமைத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement