Switch to
   
   
   
செய்தி
சிறுபான்மை கட்சிகளை இணக்கப்பாட்டுடன் இருக்குமாறு இந்தியா வலியுறுத்தல்: முஸ்லிம் காங்கிரஸுடனான சந்திப்பில் த.தே.கூ தகவல்
[ சனிக்கிழமை, 17 யூலை 2010, 05:17.40 PM GMT +05:30 ]
தமிழ் தேசிய கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் எதிர்வரும் 20ம் திகதி மீண்டும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் ஹசன் அலியின் தகவல்படி, இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறும் என தெரிகிறது.

இதற்கிடையில் நேற்றைய தினமும் இரண்டு கட்சிகளும் சந்தித்துள்ளன.

எனினும் இந்த சந்திப்புக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாத்திரமே கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இந்த சந்திப்பை மீண்டும் நடத்துவதென இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் தொடர்ந்தும் இந்தியாவிலேயே தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்கள் நேற்றைய தினம் சென்னையில் தங்கி இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

எனினும் அவர்கள் யாரையும் சந்திக்கின்றனரா என்பது குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

இதேவேளை நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது  தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியா சென்றிருந்த போது மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து முஸ்லிம் காங்கிரஸுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு சார்பில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த விளக்கமளிப்பை மேற்கொண்டிருந்தார். இதன் போது இந்திய பிரதமர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வலியுறுத்திய சில விடயங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சிறுபான்மை கட்சிகளுக்கு இடையில் மிகச்சிறந்த இணக்கப்பாடு ஒன்று காணப்பட வேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அவ்வாறின்றி சிறுபான்மை கட்சிகளுக்கு இடையில் பிளவுகள் காணப்படும் பட்சத்தில் அரசாங்கம் அதனை பயன்படுத்திக் கொண்டு இந்தியா முன்வைக்கும் யோசனைகளை தட்டிக்கழிக்கும் அபாயம் இருப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சிறுபான்மை மக்களுக்கு உடனடியாக அரசியல் தீர்வு ஒன்று வழங்க வேண்டும் என்பதில் இந்தியத் தரப்பில் உறுதியாக இருப்பதாகவும் சுமந்திரன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் தெரிவித்துள்ளார்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சித்திரவதைக்குள்ளான ஆரியவதிக்கு ஆவிப் பிரச்சினையாம்: சவூதி சென்ற குழுவினர் தகவல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 09:28.06 AM ]
சவூதி அரேபியாவில் ஆணி அறையப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் ஆரியவதி தொடர்பில் தற்போது சவூதி அரேபியாவில் வேறு விதமான கருத்தே நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
கட்டுநாயக்கவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் பலி
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:54.35 AM ]
கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இரண்டு உயர்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
வெள்ளையனை நோக்கி பூலித்தேவன் பாய்ந்தார்! சிங்களவனை நோக்கி பிரபாகரன் பாய்ந்தார்!: காசிஆனந்தன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:20.19 AM ]
வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை?எத்தனை? இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார். [மேலும்]
(2ம் இணைப்பு)
வெற்றிச்சரிதம் படைக்க ஜேர்மனியில் ஒன்றுதிரளட்டும் உலகத்தமிழினம் - வைகோ
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:27.27 AM ] []
நேற்றைய வரலாறு, இன்றைய அவலங்கள், நாளைய விடியல் இவை பற்றிச் சிந்திக்கவும், செயற்திட்டங்களை வகுக்கவும் வியூகங்கள் அமைக்கவும் வெற்றிச்சரிதம் படைக்கவும் ஜேர்மனியில் நடைபெறும் உ.த.ப.இயக்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைபெறும் மாநாட்டுக்கு வைகோ விடுத்துள்ள வாழ்த்தறிக்கை. [மேலும்]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement