|
|
|
|
| சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்களில் கடந்த 3 தினங்களில் 179 பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தில் பலி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2009, 01:15.37 PM GMT +05:30 ] | |
சிறிலங்கா படையினரின் தாக்குதலில் கடந்த 3 நாட்களில் 179 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் குறைந்தது 76 பேர், 15 வயதுக்கும் குறைவான சிறுவர்கள். அத்துடன் 16 கர்ப்பிணி தாய்மார்களும் கொல்லப்பட்டனர்.109க்கும் அதிகமான, 15 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். |
(வீடியோ பார்ப்பதற்கு (VIDEO) வீடியோ என்ற படத்தின் மேல் அழுத்தவும்)
சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான எறிகணை வீச்சுக்களில், 45 சதவீதமானவை பாதுகாப்பு வலயங்களிலேயே வீழ்ந்துள்ளன.
இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை, காயமடைந்தவர்களை அழைத்துச் செல்லவந்த வெளிநாட்டு அதிகாரிகள் சிலர், அவர்கள் வந்த செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மீதான இராணுவத்தினரின் தாக்குதலில் இருந்த தப்பியுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது, செஞ்சிலுவை சங்கத்தின் கப்பலின் பலகணி ஒன்று சேதமடைந்துள்ளது.
அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஒருவர், இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் காயமடைந்துள்ளார்.
அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை செஞ்சிலுவை சங்க பணியாளர் ஒருவரின் மனைவியும் எறிகணை வீச்சினால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.




|
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|