Switch to
   
   
   
செய்தி
முள்ளிவாயக்கால் மருத்துவமனை, மக்கள் வாழ்விடங்கள் மீது இன்று அதிகாலை முதல் படையினர் எறிகணை, வான் தாக்குதல்கள்: பல பொதுமக்கள் பலி; பட்டினியால் 12 பேர் பலி
[ திங்கட்கிழமை, 04 மே 2009, 03:25.13 PM GMT +05:30 ]
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று இரவு தொடக்கம் அகோரமான தாக்குதல்களை நடத்தினர். இதில் பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெரும் எண்ணிக்கையானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்களில் தெரிவித்துள்ளதாவது:-

சிறிலங்கா தரைப்படையினர் ஆட்லறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தி வருவதுடன், பீரங்கி சூட்டுத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர். அத்துடன் சிறிலங்கா கடற்படையினரும் மக்கள் குடியிருப்புக்கள் மீது செறிவான ரொக்கட் ஆட்லறித் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர்.

இதேவேளையில் முள்ளிவாய்க்கால் மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1:30 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரை 4 தடவைகள் 8 குண்டுகள் வீசப்பட்டுள்ளதுடன் 16 ரொக்கட்டுக்களும் ஏவப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது இன்று அதிகாலை 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் 6 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சூழவுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 25 உடலங்கள் இன்று காலை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன.

சிறிலங்கா கடற்படையினர் இன்று காலை தொடக்கம் நடத்திய ரொக்கட் தாக்குதல்களில் 47 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் காயமடைந்த நிலையில் 56 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா வான்படையினரின் குண்டுத் தாக்குதல்களில் 32 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதுடன் 46 பேர் காயமடைந்தனர். வான்படையினரின் தாக்குதல்களில் மக்கள் தங்கியிருந்த 12 தற்காலிக கூடாரங்கள் அழிந்துள்ளன.

சிறிலங்கா வான்படையினர் ஏவிய பரா வெளிச்சக்குண்டு தற்காலிக கூடாரம் ஒன்றின்மீது வீழ்ந்ததில் எரிந்து நாசமாகியுள்ளது.
கூடாரத்துக்குள் இருந்த 5 பொதுமக்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

பட்டினியால் 12 தமிழர்கள் பலி

இது இவ்வாறிருக்க, சிறிலங்கா அரசாங்கத்தின் பொருளாதாரத் தடையினால் ஏற்பட்ட பட்டினி அவலத்தினால் கடந்த 7 நாட்களில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட்டினியால் மயக்கமடைந்து நட்டாங்கண்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 12 பேரே இவ்வாறு உயிரிழந்தனர். இவர்களில் 6 பேர் சிறுவர்கள்.

வறுமையினால் நோய் வாய்ப்பட்டு மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொறுப்பு வாய்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பட்டினியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் அதிகமானோருக்கு உடல் மெலிந்து எலும்புகள் தெரிவதாகவும் நோய் எதிர்ப்பு சக்தி இவர்களின் உடலில் இல்லை என்றும் பொறுப்பு வாய்ந்த மருத்துவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளையில் அவரசமாக சிகிச்சையளிக்கப்பட வேண்டிய 500 நோயாளர்கள் முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலுக்காக காத்திருக்கின்றனர்.

ஆனால், முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கப்பல் செல்வதற்கு சிறிலங்கா படைத்தரப்பு அனுமதி மறுத்து வருகின்றது.

¨
பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement