|
|
|
|
| தமிழீழ ஆதரவாளர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டதற்கு காரணமான உரைக்கான காணொளி |
| [ புதன்கிழமை, 25 மார்ச் 2009, 09:19.13 AM GMT +05:30 ] | |
பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் 26.02.2009 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எரிகிறது ஈழம் என்ற தலைப்பில் உரையாற்றியதால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவ்வுரையின் காணொளிகளை இங்கே காணவும். |
ராஜீவ் கொலையல்ல! மரண தண்டனை என்றும் , நாள்தோறும் ஈழத்தில் தமிழ் உறவுகள் செத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை காப்பாற்ற எண்ணாமல் TELO , EROS முதலான போராளி அமைப்புகளும் பல ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து ஒன்றாக புலிகளாக போராடிக் கொண்டிருப்பது தெரியாமல் சகோதரச் சண்டை என்று அறிவுக்கு ஒவ்வாமல் மனிதநேயமில்லாமல் கூறிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களை கண்டித்தும், தமிழீழத்தேசிய தலைவர் அவர்களை கைது செய்ய தீர்மானம் இயற்றிய ஜெ.ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளை பற்றிய உண்மைகளை ஆதாரத்தோடு வெளிப்படுத்தி உரையாற்றினார்.
இவ்வாறு அரசியல்வாதிகளின் மனிதநேயமற்ற நாடகத்தினை மக்களுக்கு தெளிவாக கூறியதால் தமிழின துரோக அரசானது தமிழுணர்வாளர் கொளத்தூர் மணி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ஏற்கெனவே ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் தனது தோட்டத்திலேயே ஈழப்போராளிகளை தங்க வைத்து போராளிகளுக்கு பயிற்சி அளித்ததற்காகவும், வேலூர் சிறையிலிருந்து போராளிகள் சுரங்கம் தோண்டி தப்பியதற்கு உதவியதாகவும், கர்நாடக வாழ் தமிழர்களை காக்க போராடியதற்காகவும் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர். |
|
|
|
|
| காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்! |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ] |
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்] |
| சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல் |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ] |
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்] |
| சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ] |
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்] |
| பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ] |
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] |
| தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு |
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] [ ] |
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|