Switch to
   
   
   
செய்தி
தமிழர்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத, மகத்தான நவம்பர் மாதம்: கனடா உதயன்
[ வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 03:32.05 PM GMT +05:30 ]
எம்மவர்கள் கலங்கிப் போயுள்ளனர். எதைச் செய்யலாம், எதைச் செய்யாமல் தவிர்க்கலாம் என்பது தெரியாமல் தவிக்கின்றனர். இவ்வாறான ஒரு நேரத்தில் தான் மகத்தான நவம்பர் மாதம் பிறந்திருக்கின்றது. இவ்வாறு கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் இதழ் தமது ஆசிரியர் தலையங்கத்தில்  குறிப்பிட்டுள்ளது.

உதயன் ஆசிரியர் தலையங்கத்தில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வெற்றிகளின் சின்னமாய் விளங்கிய அந்த வன்னி மண் சின்னா பின்னமாய் ஆகிவிட்ட நிலையில், விடுதலை வேட்கையின் வித்துக்கள் முளைத்த அந்த மண் இன்று எதிரிகளின் காலடிக்குள் வீழ்ந்து இடர்ப்படுகின்ற வேளையில் மானமுள்ள நமது மக்கள் உள்ளம் வெதும்பி நிற்கின்றனர். 

ஆனால் எதிரிகளோ கொக்கரிக்கின்றனர். கொலை வெறி கொண்டவர்கள் இன்னும் அடங்கியதாகவும் தெரியவில்லை. குருதியின் வாடை இன்னும் அந்த மண்ணில் வீசுகின்றது. சீருடைக்காரச் சிங்களப் படைகள் அந்த மண்ணை ஆக்கிரமித்து அட்டகாசம் செய்கின்றனர்.

இவ்வாறான ஒரு நேரத்தில் தான் மகத்தான நவம்பர் மாதம் பிறந்திருக்கின்றது.

நவம்பர் மாதமென்பது ஒரு மகத்தான மாதம் என்பதை நாம் இந்தப் பக்கங்களில் வருடக்கணக்காக எழுதிக் கொண்டே வந்தோம். இன்று மட்டும் அதை எப்படி மறுப்பது. அல்லது மறப்பது?. நமது ஈழத்தமிழர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டும்.

அந்த மக்கள் தமது சுயநிர்ணய உரிமைகளை பெற்றவர்களாய் தங்கள் சொந்த மண்ணில் வாழ வேண்டும். அதை சிங்கள தேசத்திடமிருந்து வாய்களால் கேட்டு வாங்கிவிட முடியாது.

அதைப் போராடித்தான் பெறவேண்டும் என்ற நம்பிக்கைகளோடு போராடப் புறப்பட்ட அந்த பிரபாகரன் என்னும் வீரத்தமிழத் தலைவன் பிறந்த மாதம் இந்த மகத்தான நவம்பர்தான்.

அதே மாதத்தில் தான் இந்த மாவீரர் பற்றிய நினைவெழுச்சி நிகழ்வுகளும் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வந்தன. அந்த வீரத் தலைவனையும் மாவீரர்களையும் நாம் ஏன் மறந்து விட வேண்டும்.

மற்றவர்களைப் போல அவர்களின் பெருமைகளையும் தியாகங்களையும் மறந்து விட்டு எங்களால் எப்படி நமது தினசரி கடமைகளைச் செய்ய முடியும். என்ற கேள்விகளை உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் மனச்சாட்சியிடம் ஒரு தடவை கேட்டுப் பார்க்க வேண்டும்.

வெற்றிகள் பலவற்றை முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் அடைந்த போது சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தவர்கள். அந்த வீரர்களுக்காக நிதியை வாரி வாரி வழங்கியவர்கள் ஏன் தோல்வி ஏற்பட்ட போது மட்டும் துவண்டு விட வேண்டும்.? கருத்துக்களைச் சொல்ல அஞ்ச வேண்டும்? என்ற வினாக்களைத் தான் நாம் இங்கே முன்வைக்க விரும்புகின்றோம்.

நமது மாவீரர்களின் தியாகங்கள் நாம் எப்போதும் மறக்க முடியாதவை. உலகில் தோற்றுவிக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் பலவும் பல நோக்கங்கள் கொண்டவைகளாக இருந்தன. ஆனால் நமது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் சர்வதேசத்தால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு உலகம் வியப்படையும் வண்ணம் இருந்தது என்பதை நாம் மறந்து விட முடியாது.

ஆதலினால் தான் சர்வதேசம் என்ற பயங்கரவாதக் கூட்டு உன்னதமான அந்த விடுதலை இயக்கத்தை பூண்டோடு அழிக்க தமது கைகளைக் கோர்த்துக் கொண்டது. தங்களுக்குள் இருந்த வேற்றுமைகளை தற்காலிமாக தவிர்த்து விட்டு அவர்கள் விடுதலைப் புலிகளை அழிக்கத் துணிந்தனர்.

எவ்வாறான தோல்விகளும் பின்னடைவுகளும் நமது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஏற்பட்டாலும் அந்த மாவீரர்களின் தியாகங்கள் மறக்கப்படக் கூடியவை அல்ல. அந்த உன்னத உயிர்த்தியாகங்களை நாம் நம்மால் முடிந்த வகையில் மரியாதை செய்து வணங்க வேண்டும்.

வாய்களால் எதுவும் பேச முடியாத சூழ்நிலை இருக்குமானால் மனதிற்குள் நினையுங்கள். எழுத்தில் வடித்து பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாவிட்டால் மனதில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அந்த தியாகத்தின் பெருமைகளை.

இந்த வாசகங்களையே நாம் இந்த மகத்தான மாதத்தில் நமது மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புகின்றோம்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement