முன்னதாக இன்று 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் இலங்கை அகதிகள் 78 பேருடன் தரித்திருக்கும் இந்த கப்பல் தமது கடற்பரப்பில் இருந்து வெளியேற வேண்டும் என இந்தோனேசியா உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் முறுகலை தீர்க்க இந்தோனேசியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன.
இலங்கையில் இருந்து கடந்த மாத நடுப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இந்தக் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளாகவிருந்த வேளையில் இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து அவுஸ்திரேலிய கடற்படையினர் காப்பாற்றினர்.
இதனையடுத்து இந்தக் கப்பலில் உள்ளோரை தாம் பொறுப்பேற்பதா? அல்லது இந்தோனேசியா பொறுப்பேற்பதா என்ற முறுகல் தொடர்ந்து வருகிறது.
இது அவுஸ்திரேலிய கடற்படையினரே காப்பாற்றினர் என்பதால் அதனை அவுஸ்திரேலியாவே பொறுப்பேற்க வேண்டும் என இந்தோனேசியா கூறி வருகிறது.
எனினும் இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து காப்பாற்றப்பட்டமையால் இந்தோனேசியாவை நோக்கி இந்த கப்பலை செல்லுமாறு அவுஸ்திரேலியா அண்மையில் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையிலேயே இந்தக் கப்பல் தற்போது இந்தோனேசியக் கடற்பரப்பில் தரித்து நிற்கிறது. |