Switch to
   
   
   
செய்தி
பாக்கு நீரிணை கடல் பகுதியில் இலங்கை கடற்படை ரோந்து அதிகரிப்பு: இராமேசுவரம் மீனவர்கள் தகவல்
[ வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 01:17.35 PM GMT +05:30 ]
பாக்கு நீரிணை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் 20 போர் கப்பல்களில் ரோந்து சுற்றி வந்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர் என்று இராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

இராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் மீனவர்கள் விசைப்படகுகளில் இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் முதல் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியும், படகுகளைச் சேதப்படுத்தியும், மீன்களைப் பறித்தும் செல்கின்றனர்.

மேலும் இலங்கை கப்பல்களில் சீனாவைச் சேர்ந்த கடற்படை வீரர்களும் உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பாக் நீரிணைப்பு கடலில் இலங்கைக் கடற்படையினர் தங்கள் வலிமையை நிலைநாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:

இராமேசுவரத்தில் நவம்பர் 4-ம் தேதி 400 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இந்தப் படகுகள் நடுக்கடலில் வலையை வீசியபோது அங்கு இலங்கை கடற்படையின் 20 போர் கப்பல்கள் ரோந்து வந்தன.

முன்பெல்லாம் 5 முதல் 8 கப்பல்களில்தான் ரோந்து சுற்றி வருவர். தற்போது கூடுதலான கப்பல்களுடன் ரோந்து வந்து எங்களை விரட்டியடித்தனர். நாங்கள் மீன்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம்.

மீன் வளம் அதிகம் உள்ள பாக்கு நீரிணை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ஆதிக்கம் செலுத்துவதால், தமிழக மீனவக் குடும்பங்கள்,தொழிலாளர்கள் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement