Switch to
   
   
   
செய்தி
மீள்குடியமர்த்தும் மக்களுக்கு வழங்கும் உதவித்தொகையை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 12:45.50 PM GMT +05:30 ]
மீளக்குடியேற்றப்படும் மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படுகின்றது. உடனடி தேவைக்காக 5 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. எனினும் தற்போது வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாவை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன். என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் என்.ஸ்ரீகாந்தா பா.உ. நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.


அத்துடன் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பியையும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடைக்கால கணக்கறிக்கை பிரேரணை மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் நேற்று பாராளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-

யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளன. வீடுகள், வீதிகள், பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. ஆஸ்பத்திரிகளில் வைத்தியர்கள், மற்றும் தாதியர் பற்றாக்குறை நிலவுகிறது. இக்குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு புனரமைப்பு பணிகளுக்கு கட்சி சார்பின்றி ஒத்துழைப்பு நல்க நாம் தயாராகவுள்ளோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கட்சி வேறுபாடுகளை மறந்து சகலரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

சிங்கள மக்களிடமிருந்து எந்தத் தீர்வையும் பறித்தெடுக்க தமிழ் மக்கள் விரும்பவில்லை. அதேநேரம், தமிழ் மக்கள் மீது எந்தத் தீர்வையும் திணிக்கவும் முடியாது.

எமக்கு அரசியல் அணிகள் குறித்து அக்கறை கிடையாது. நாம் எந்தக் கூட்டணியிலும் சிக்கிக்கொள்ளமாட்டோம். ஆட்சியைக் கைப்பற்றும் ஆசை எமக்குக் கிடையாது. அதிகாரப் போட்டி இந்நாட்டின் தேசியப் பிரச்சினையை இழுத்தடிக்கக்கூடாது.

எமது கடமைகளைச் செய்யத் தயாராகவுள்ளோம். எம்மால் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். எல்லாக் கட்சிகளும். ஓரணியில் நின்றால் இந்நாட்டு மக்களுக்கு நல்லதொரு எதிர்காலம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement