பிரதி நீதியமைச்சர் வீ புத்திரசிகாமணியின் ஏற்பாட்டில் அழைத்து வந்து இவர்களை நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.
இதன்போது சிறுவர், சிறுமியரும் தமது கைகளை தட்டி தமது சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.
வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, இராணுவத் தாக்குதல்கள் காரணமாக இந்த சிறுவர் சிறுமியர் தமது பெற்றோரை இழந்த நிலையில், வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் செட்டிக்குளம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சிறுவர் போராளிகள்,சுமார் 300 பேர் வரை கொழும்பு இரத்மலானையில் அமைந்துள்ள, கொழும்பு இந்துக் கல்லூரியின் கட்டிடத் தொகுதியில் கல்வி கற்பதற்காக தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களின் கட்டிடங்கள் கம்பிகளால் பின்னப்பட்டு இவர்கள் தப்பிச்செல்லாதவாறும், அவர்களின் பாதுகாப்பும் கருதியும் பொலிஸார் பாதுகாவல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
|