Switch to
   
   
   
செய்தி
வவு. செட்டிக்குளம் முகாமிலுள்ள பெற்றோரை இழந்த சிறுவர்கள் நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்
[ வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 02:49.16 PM GMT +05:30 ]
வவுனியா, செட்டிக்குளம் இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வன்னிப்போரினால் பெற்றோரை இழந்த சிறுவர், சிறுமியர் இன்று நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பிரதி நீதியமைச்சர் வீ புத்திரசிகாமணியின் ஏற்பாட்டில் அழைத்து வந்து இவர்களை நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.

இதன்போது சிறுவர், சிறுமியரும் தமது கைகளை தட்டி தமது சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, இராணுவத் தாக்குதல்கள் காரணமாக இந்த சிறுவர் சிறுமியர் தமது பெற்றோரை இழந்த நிலையில், வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் செட்டிக்குளம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சிறுவர் போராளிகள்,சுமார் 300 பேர் வரை கொழும்பு இரத்மலானையில் அமைந்துள்ள, கொழும்பு இந்துக் கல்லூரியின் கட்டிடத் தொகுதியில் கல்வி கற்பதற்காக தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் கட்டிடங்கள் கம்பிகளால் பின்னப்பட்டு இவர்கள் தப்பிச்செல்லாதவாறும், அவர்களின் பாதுகாப்பும் கருதியும் பொலிஸார் பாதுகாவல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement