சரத் பொன்சேகா நேற்று அதிகாலை நாடு திரும்பிய பின்னர் இவ்வாறான சந்திப்பு ஒன்று நேற்று மாலைக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அந்த சந்திப்பு இடம்பெறவில்லை.
இதிலிருந்து இன்னமும், இந்த இரண்டு தரப்புக்கும் இடையிலான முறுகல் நிலை தணியவில்லை என்றே பாதுகாப்பு தரப்பு கருதுகிறது.
அமெரிக்காவில் கோத்தாபாயவுக்கு எதிராக யுத்த மீறல் விசாரணையில் சாட்சியாக சமுகமளிக்க அழைக்கப்பட்டிருந்த போதே சரத் பொன்சேகா அதனை கைவிட்டு, நாடு திரும்பினார்.
எனினும், இதனை ஐக்கிய தேசிய கட்சி மாற்று கோணத்தில் பார்க்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல, கோத்தாபய ராஜபக்ஷவை காப்பாற்றிக் கொள்வதற்காகவே அரசாங்கம் சரத் பொன்சேகாவை முனைப்புடன் இலங்கைக்கு அழைத்ததாக தெரிவித்துள்ளார்.
|