One moment please..
 
செய்தி
  • Photo
கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ தேசியக்கொடி முன்மொழிவும், தொடர் விழிப்புணர்ச்சி நிகழ்வும்
[ திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 08:36.22 AM GMT +05:30 ]
உலகெங்கும் பரந்து வாழும் தமிழரனான எமக்கு தமிழீழத் தேசியக் கொடியே எமது வரலாறு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான தியாகங்களை எடுத்தியம்புகின்றது. இத்துடன் ஓர் நாட்டின் தேசியச் சின்னங்களானவை அந்நாட்டின், அந்த நாட்டு மக்களின், அரசியல் அபிலாசைகளைக் குறித்து நிற்கும்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகெங்கும் வாழும் அனைத்து மக்களும் தமது நாட்டுக்கென, தம்மை பிரதிநிதிதுவப்படுத்தும் தனித்துவமான கொடிகளைக் கொண்டுள்ளார்கள்.

இவ்வாறாக நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடிகளுக்கு வழங்கப்படும் மரியாதையே அந் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் மரியாதையாகக் கருதப்படும்.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழரனான எமக்கு தமிழீழத் தேசியக் கொடியே எமது வரலாறு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான தியாகங்களை எடுத்தியம்புகின்றது.

இத்துடன் ஓர் நாட்டின் தேசியச் சின்னங்களானவை அந்நாட்டின், அந்த நாட்டு மக்களின், அரசியல் அபிலாசைகளைக் குறித்து நிற்கும்.

காலம் காலமாக தமிழீழ மக்கள் தொடர்ச்சியாக அந்நிய சக்திகளால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவ் அந்நிய சக்திகளால் தமிழ் மக்களின் தேசிய இறையாண்மை தொடர்ச்சியாக நசுக்கப்பட்டு வந்தது. யாழ் பேரரசின் முடியாட்சி போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்டபோது நந்திக் கொடியை தமிழர்கள் இழந்து நின்றனர்.

பின்னர் வன்னி இராச்சியம் தனது வாள் பொறிக்கப்பட்ட கொடியை பண்டார வன்னியன் மன்னனது தோல்வியோடு இழந்தது. இவாறான அன்னிய அடக்குமுறைப் போர்களால் தமிழர்களது கொடியும் அவர்களது பாரம்பரிய தேசியச் சின்னங்களும் இழக்கப்பட்டு, தொடர்ந்து அவர்களது வரலாற்றிலிருந்தும் அழிக்கப்பட்டது.

தமிழீழரின் தேசியக்கொடியானது தமிழ் மக்கள் தம் பாரம்பரிய தாயகமாம் தமிழீழத் தேசியத்தின் மேற்கொண்டுள்ள அபிலாசைகளை எடுத்துக் காட்டுகின்றது. தமிழீழத் தமிழர் அனைவருமே தமது விடுதலைக்காக பாடுபட்ட மாவீரை நினைவூட்டும் தமிழீழக்கொடியை அவர் மனதில் வைத்து போற்றுகின்றனர்.

கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் கார்த்திகை 1 ம் திகதியன்று பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி தமிழீழக் கொடி முன்மொழிவும் தொடர் விழிப்புணர்ச்சி நிகழ்வுகளும் ஆரம்பிக்கப்பட்டன.

தேசியக் கொடியின் கீழ் அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் ஈழத் தமிழர்கள் உலகுக்கு தமது அரசியல் அபிலாசைகளை ஆணித்தரமாக எடுத்துக் கூறியுள்ளனர். எமது தமிழீழக் கொடியை முன்மொழியும் இத் தொடர் விழிப்புணச்சி நிகழ்வின் மூலம் ஈழத் தமிழர்கள் உலகுக்கு தனித் தமிழீழமே தீர்வு என எடுத்துக் கூறவுள்ளனர்.

இன்றைய நினைவு தினத்தில் இவ் முன்மொழிவு நிகழ்வும் ஒவ்வொரு தமிழனும் தனது தமிழீழத் தேசியக் கொடியை முன்மொழியக் கூடியவாறு பிரத்தியோக இணையத்தளமும் மாவீரர் குடும்பத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களது நினைவுதினமான இன்று, அவரின் மற்றும் அனைத்து தியாகிகளின் வேட்கையான தமிழீழத்தை, எம் தமிழீழக் கொடியை மற்றும் தேசியச் சின்னங்களை அனைத்து தமிழரும், இளையோரும் எமது பாரம்பரியக் சின்னங்களாக முன்மொழிந்து எற்றுக்கொண்டனர்.

இத்தொடர் நிகழ்ச்சியில் அனைத்து உலகத் தமிழரையும் பங்குபெறுமாறு கனேடிய இளையோர் அமைப்பு வேண்டுகின்றது.

 

 

 

 

 

 

 

 


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்