Switch to
   
   
   
செய்தி
சரத் பொன்சேகாவை தேவையற்ற விதத்தில் விசாரணை செய்தால் கடும் நடவடிக்கை: ஜே.வி.பி. தலைவர் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை
[ திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 02:45.04 AM GMT +05:30 ]

சரத் பொன்சேகாவின் கிரீன் காட், வதிவிட அனுமதியை நீடிப்பதற்காக சாதாரண விசாரணைகள் நடத்தப்படலாம்.ஆனால் தேவையற்ற வகையில் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் சரத் பொன்சேகாவை விசாரணை செய்வதற்கு அமெரிக்காவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இதேவேளை 30 வருட பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில்,இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை ஜே.வி.பி எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 தேவையற்ற வகையில் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சோமவன்ச
 
தேவையற்ற வகையில் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நட்பு நாடுகளுடன் இணைந்து உயிரைப் பணயம் வைத்து போராட்டங்களை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க குடியுரிமைப் பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் எவ்வித சிக்கல்களும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், அதற்கு மேலதிகமாக மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஏதாவது விசாரணைகள் நடத்தப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
சரத் பொன்சேகாவிடம் வேறும் விடயங்கள் பற்றி கேள்விகளை எழுப்புவதற்கு அமெரிக்காவிற்கு எவ்வித உரிமையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சரத் பொன்சேகா மட்டுமன்றி அரசியல் தலைவர்கள் மற்றும் படை அதிகாரிகளுக்கு எதிராக எந்தவொரு நாடேனும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் அதற்கு எதிராக ஜே.வி.பி கடுமையான நடவடிக்கை எடுக்க ஒருபோதும் பின்நிற்காதென அவர் தெரிவித்துள்ளார்.
 

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement