One moment please..
 
செய்தி
(2ம் இணைப்பு)
அவுஸ்திரேலியாவில் படகு மூழ்கியதில் 11 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர்: ஒருவரின் சடலம் மீட்பு
[ திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:06.08 AM GMT +05:30 ]
இலங்கையர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என நம்பப்படும் சட்டவிரோத படகு ஒன்று, அவுஸ்திரேலிய வடமேற்கு கடற்பரப்பில் கடலில் இன்று மூழ்கியுள்ளது. படகில் இருந்து காணாமல் போன குறைந்தது 11 இலங்கையர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

இதன்போது,20 பேர் வரை,பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது, இந்தப் படகில், சுமார் 40 பேர் வரை பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 17 பேர் அவுஸ்திரேலிய கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தப் படகில் நேற்று பின்னிரவு பிரச்சினை ஏற்பட்டதன் பின்னரே இன்று அது மூழ்கியுள்ளது.

அவுஸ்திரேலிய கரையோர கண்காணிப்பு விமானம் இந்தப்படகை அவதானித்தன் பின்னரே அவுஸ்திரேலிய மீட்புக்கப்பல், விரைந்துள்ளது.

ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து 78 இலங்கையர்களை காப்பாற்றிய பின்னர், அது இந்தோனிசியாவுடன் இராஜதந்திர முறுகலை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே 17 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பிந்திய செய்தி

அவுஸ்திரேலிய கடலில் மூழ்கிய படகில் இருந்த குறைந்தது 11 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர். அவுஸ்திரேலிய பிரதமர், இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு
 
அவுஸ்திரேலிய கடற்பரப்பில்,மூழ்கியதாக கூறப்படும், படகில் இருந்து காணாமல் போன குறைந்தது 11 இலங்கையர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவுஸ்திரேலிய பிரிஸ்பேன் டைம்ஸ், செய்திதாளின் தகவல்படி,இந்த தேடுதல் நடவடிக்கையில் விமானங்களும்,கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இதன் போது நேற்று 27 பேர் காப்பாற்றப்பட்டதுடன் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது
 
காப்பாற்றப்பட்டவர்களின் பாரிய அழுகை சத்தத்தை கேட்கக்கூடியதாக இருந்ததாக மீட்பு கப்பலின் கப்டன் தெரிவித்துள்ளார்.
 
காப்பாற்றப்பட்டவர்கள், கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தமது நாடு எதிர்கொள்ளும் நிலைமைகள் தொடர்பாக ஆராய அதிகாரியான ஜோன் மெக்கத்தியை  இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ரூட் தெரிவித்துள்ளார்.
 


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்