Switch to
   
   
   
செய்தி
(2ம் இணைப்பு)
அவுஸ்திரேலியாவில் படகு மூழ்கியதில் 11 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர்: ஒருவரின் சடலம் மீட்பு
[ திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:06.08 AM GMT +05:30 ]
இலங்கையர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என நம்பப்படும் சட்டவிரோத படகு ஒன்று, அவுஸ்திரேலிய வடமேற்கு கடற்பரப்பில் கடலில் இன்று மூழ்கியுள்ளது. படகில் இருந்து காணாமல் போன குறைந்தது 11 இலங்கையர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

இதன்போது,20 பேர் வரை,பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது, இந்தப் படகில், சுமார் 40 பேர் வரை பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 17 பேர் அவுஸ்திரேலிய கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தப் படகில் நேற்று பின்னிரவு பிரச்சினை ஏற்பட்டதன் பின்னரே இன்று அது மூழ்கியுள்ளது.

அவுஸ்திரேலிய கரையோர கண்காணிப்பு விமானம் இந்தப்படகை அவதானித்தன் பின்னரே அவுஸ்திரேலிய மீட்புக்கப்பல், விரைந்துள்ளது.

ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து 78 இலங்கையர்களை காப்பாற்றிய பின்னர், அது இந்தோனிசியாவுடன் இராஜதந்திர முறுகலை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே 17 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பிந்திய செய்தி

அவுஸ்திரேலிய கடலில் மூழ்கிய படகில் இருந்த குறைந்தது 11 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர். அவுஸ்திரேலிய பிரதமர், இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு
 
அவுஸ்திரேலிய கடற்பரப்பில்,மூழ்கியதாக கூறப்படும், படகில் இருந்து காணாமல் போன குறைந்தது 11 இலங்கையர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவுஸ்திரேலிய பிரிஸ்பேன் டைம்ஸ், செய்திதாளின் தகவல்படி,இந்த தேடுதல் நடவடிக்கையில் விமானங்களும்,கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இதன் போது நேற்று 27 பேர் காப்பாற்றப்பட்டதுடன் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது
 
காப்பாற்றப்பட்டவர்களின் பாரிய அழுகை சத்தத்தை கேட்கக்கூடியதாக இருந்ததாக மீட்பு கப்பலின் கப்டன் தெரிவித்துள்ளார்.
 
காப்பாற்றப்பட்டவர்கள், கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தமது நாடு எதிர்கொள்ளும் நிலைமைகள் தொடர்பாக ஆராய அதிகாரியான ஜோன் மெக்கத்தியை  இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ரூட் தெரிவித்துள்ளார்.
 

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement