|
|
|
| சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு இரண்டாம் கட்ட கடன் உதவியை வழங்கியுள்ளது |
| [ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 03:46.46 AM GMT +05:30 ] |
இலங்கையின் பொருளாதாரத்தை மீளமைக்கும் பொருட்டு தமது இரண்டாம் கட்ட நிதி யுதவியை சர்வதேச நாணய நிதியம் விடுவித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் நேற்று வாஷிங்டனில் வெளியாகியுள்ளது.
|
இதன்படி இலங்கைக்கு 329.4 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளன. நிலையான இரண்டாம் கட்ட கடன்தொகை ஏற்பாடான 658.8 மில்லியன் டொலரின் கீழேயே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி முகாமைப் பணிப்பாளர், டொகாடோசி காடோ தெரிவித்துள்ளார். இலங்கையின் அண்மைக்கால பொருளாதார வளர்ச்சிப்போக்கு திருப்திகரமாக உள்ளது. அவசியமான மீளமைப்பு திட்டங்கள் உரிய வகையில் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே இந்த தொகையை வழங்கத் தாம் இணங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக இலங்கைக்கான தமது கடன் திட்டத்தை, கடந்த ஜூலை மாதத்தில் தொடங்கியது. அன்று முதல் இலங்கை அரசாங்கம் தமது பொருளாதாரத்தில் பாரிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக பொதுமக்களுக்கான மானிய குறைப்பு, சம்பள அதிகரிப்பின்மை உட்பட்ட விடயங்கள் இதில் அடங்குகின்றன. 2010 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிக்காது கணக்கு அறிக்கையை மட்டும் இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தமையும் இதில் ஒரு காரணமாகும். இந்தநிலையில் இலங்கையின் நாடாளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்திற்கு அமைய வரவுசெலவுத்திட்டத்திற்கு பதிலாக கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அது நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே சர்வதேச நாணய நிதியம் தமது கடனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|