Switch to
   
   
   
செய்தி
கனடாவிற்கு சென்ற கப்பல் புலிகளுடையதா? விசாரணை தொடர்கிறது
[ செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 03:35.29 PM GMT +05:30 ]

கனடாவில் கடந்த 17 ம் திகதி கைதான இலங்கையிலிருந்து சென்ற கப்பல் புலிகளுக்கு சொந்தமானதா என்பதை கண்டுபிடிக்க கனடிய புலனாய்வுத் துறையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் கைதான இலங்கை படகில் சென்றவர்கள் தம்முடன் இரண்டு ஆயுதங்களையும் உடன் எடுத்துச் சென்றதாக கனேடிய புலானாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் நேற்று தெரிவித்துள்ளனர்.

இந்த கப்பல் புலிகளுக்கு சொந்தமானது என்பதை அவர்கள் மறைக்க முற்பட்டதாகவும், எனினும் அது உறுதியானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கப்பல் கனடா நோக்கி வருவதாக தகவல் கிடைத்ததன் பின்னர், கனேடிய புலனாய்வுத் துறையினாரால் காத்திருந்து கடந்த 17ம் திகதி புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அந்த கப்பலில் வந்த 76 பேரில் ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்ட நிலையில், ஏனைய 75 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கப்பலில் இருந்த இரண்டு துணி வகைகளை சோதனை இட்ட போது, அவை வெடிப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டமையை உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவற்றுடன் டெட்ராநைட்ரேட் அல்லது PETN மற்றும் TNT ஆகிய வெடிப்பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இதில் PETN என்ற பொருள், இருதய நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement