கனடாவில் கைதான இலங்கை படகில் சென்றவர்கள் தம்முடன் இரண்டு ஆயுதங்களையும் உடன் எடுத்துச் சென்றதாக கனேடிய புலானாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் நேற்று தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பல் புலிகளுக்கு சொந்தமானது என்பதை அவர்கள் மறைக்க முற்பட்டதாகவும், எனினும் அது உறுதியானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பல் கனடா நோக்கி வருவதாக தகவல் கிடைத்ததன் பின்னர், கனேடிய புலனாய்வுத் துறையினாரால் காத்திருந்து கடந்த 17ம் திகதி புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அந்த கப்பலில் வந்த 76 பேரில் ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்ட நிலையில், ஏனைய 75 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கப்பலில் இருந்த இரண்டு துணி வகைகளை சோதனை இட்ட போது, அவை வெடிப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டமையை உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவற்றுடன் டெட்ராநைட்ரேட் அல்லது PETN மற்றும் TNT ஆகிய வெடிப்பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதில் PETN என்ற பொருள், இருதய நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
|