Switch to
   
   
   
செய்தி
கொலைசெய்யப்பட்டது தமிழ் இளைஞன் என்பதால் நியாயமான விசாரணை இடம்பெறுவது சந்தேகம்
[ செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 09:35.22 AM GMT +05:30 ]
பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்பட்டமை பொலிஸ் அராஜகத்தின் உச்சக்கட்டம். இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் இலங்கை கொலைகார நாடாக மாறிவிடும் என்று ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இச் சம்பவத்தில் கொல்லப்பட்டது தமிழ் இளைஞன் என்பதால் நியாயமான விசாரணைகள் நடைபெறுவதென்பது சந்தேகமான விடயமென்றும் அவர் குறிப்பிட்டார்.

பம்பலப்பிட்டி கடற்கரையில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு, கடலில் தள்ளிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே எஸ்.
பி. திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், நாளுக்கு நாள் பொலிஸாரின் அராஜகங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அங்குலானையில் இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். அதற்கு முன்பும் பல சம்பவங்கள் இடம்பெற்றன.

இன்று மனநோயாளியான இளைஞர் ஒருவர் கையெடுத்துக் கும்பிட்ட போதும், ஈவிரக்கமின்றி பொது மக்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டு கடலில் தள்ளிக் கொல்லப்பட்டுள்ளார்.

எனவே, இக்கொலை தொடர்பாக நீதியான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். கொல்லப்பட்டது தமிழ் இளைஞன் என்பதால் நீதியான விசாரணைகள் நடத்தப்படுமா என்பது சந்தேகமே. ஆனால், இதற்கு இடமளிக்கலாகாது.

அனைவரும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அமைச்சர்கள் தமது தவறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாரைப் பயன்படுத்துகின்றனர். இதனால், குற்றமிழைக்கும் பொலிஸாரைப் பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.

பொலிஸார் சிலர் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுகின்றனர். இதனால், அவர்கள் குற்றமிழைக்கும் பட்சத்தில் பாதுகாக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, எந்தப் பயம் இன்றி கொலைகள், தாக்குதல்கள் என்பன பட்டப்பகலில், அதுவும் பொதுமக்கள் முன்னிலையில் இடம்பெறுகின்றன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், நாடு முழுவதும் கொலைக் கலாசாரம் தலைதூக்கும். அதன் பின்னர் நாட்டில் ஒழுக்கமுள்ள, நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது போகும்'' என்றார்.



பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement