வெற்றியை கொண்டாடும் அரசாங்கம் வெற்றிக்கு காரணமானவர்களை புறம் ஒதுக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியில் பொதுமக்களும் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
எனினும், அரசாங்கம் எந்த திசையில் இருந்தும் அதிகாரத்தையும், செல்வத்தையும் மாத்திரமே எதிர்பார்க்கிறது என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தற்போது ஒரு கட்டுப்பாடற்ற நிலைமையை நோக்கி நகர்கிறது, இது நமது அதிகாரங்களையும் இறைமையையும் இழக்கும் சாத்தியத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கான நீரினையும், உரத்தினையும் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது..
இதேவேளை அரசாங்கம் தற்போது வெளிநாடுகளுடன் வாதங்களை முன்வைத்து வருகிறது. இதன் தலைவிதியை இலங்கை மக்களே அனுபவிக்க நேரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் சர்வதேசத்தின் பல நாடுகளின் பொருளாதாரங்கள் பின்தங்கியிருக்கும் நிலை இருப்பினும், அந்ததந்த நாடுகளின் அரசாங்கங்கள் தமது திரவத்தன்மையை அறிந்து செயற்படுவதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாடே வேலை வாய்ப்பின்றி தடுமாறும் போது, அரசாங்கம் தமது குடும்ப சுற்றுலாவுக்காக, 180 பில்லியன்களை செலவிட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் |