|
|
|
| மஹிந்தவின் யுத்த தேனிலவு முடிவுக்கு வருகிறது: ஓர் ஆய்வு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 04:47.52 AM GMT +05:30 ] |
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் “யுத்த தேனிலவு” முடிவுக்கு வந்துள்ளது. அண்மையில், பெற்றோலிய பணியாளர்களும், மாணவர்களும் நடத்திய போராட்டங்கள் இதனை எடுத்துக்காட்டுக்கின்றன. |
அதேநேரம் நீர் மற்றும் தபால் பணியாளர்களும் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்களுக்கு தயாராகி வருகின்றமை அவரின் தேனிலவுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.
மஹிந்த ராஜபக்ச யுத்தத்தின் போது பல திட்டங்களை கொண்டிருந்தார். எனினும், அவர் அவ்வாறான எந்த ஒரு பொருளாதார திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. யுத்தத்தின் பின்னர் அதன் அலையிலேயே பொருளாதாரத்தை அவர் முன்கொண்டு செல்ல முனைகிறார்.
இந்தநிலையில் நாட்டை பாதுகாப்பதற்கு, பொதுமக்களுக்கு எதிர்வரும் தேர்தல் காலத்தில் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் அபிவிருத்தி திட்டங்கள் எவ்வித தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தவில்லை.
மேம்பாலங்களும்,ஏனைய நாட்டிற்கு தற்போதைக்கு தேவையற்ற அபிவிருத்திகளும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை. இவை நீண்டகால திட்டத்திற்கு ஏற்புடையதாக இருக்கலாம் ஆனால் தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பசிக்கு தீனி போடவேண்டிய கடமையில் இருந்து அரசாங்கம் விலகியுள்ளது.
யுத்தத்தின் பின்னர், ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் திட்டங்கள் எவையும் இல்லை. இதன் காரணமாகவே அரசாங்கம் உரிய ஒதுக்கங்களை செய்யாமல் பணத்தை அச்சிட்டுள்ளது. இது பணவீக்கத்தை மேலும் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் மஹிந்தவின் ஆட்சியை முடிவுறுத்தும் சக்தியை கொண்ட எதிர்க்கட்சி ஒன்று உருவாகுமானால் அது மஹிந்தவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர் |
|
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்! |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்] |
| யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ] |
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்] |
| இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ] |
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] [ ] |
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] [ ] |
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| advertisement |
|
|