Switch to
   
   
   
செய்தி
போர் குற்றங்கள் புரிந்ததாக பொய்யான தகவல்களை வழங்கிய அரச சார்பற்ற நிறுவனங்கள் கண்டு பிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 08:03.21 AM GMT +05:30 ]
இராணுவப் படையினர் போர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கிய மூன்று அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

போர் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக போலியான தகவல்களை அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக்கிற்கு இந்த மூவரும் வழங்கியுள்ளனர்.
 
குறித்த மூன்று அரச சார்பற்ற நிறுவன உயரதிகாரிகள் பற்றிய தகவல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் திரட்டியுள்ளனர்.

இந்த அரச சார்பற்ற நிறுவனங்களது உயரதிகாரிகளில் இருவர் அமெரிக்காவிற்கு சென்று றொபர்ட் ஓ பிளேக்கை சந்தித்துள்ளதாகவும், ஏனையவர் இலங்கையில் வைத்து பிளேக்கைச் சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
றொபர்ட் ஓ பிளேக் அமெரிக்கத் தூதுவர் பதவியை விட்டு விலகும் போது நடைபெற்ற பிரியாவிடை வைபவத்திலும் இவர்கள் மூவரும் கலந்து கொண்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
 

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement