ரயில்வே காணியில் கட்டிடம் அமைக்க மாநகர சபை அனுமதி: யாழ்.மேயரின் மேலும் ஒரு முறைகேடு
குறிப்பாக மாநகர சபைக்குட்பட்ட பகுதியில், யாழ்.நகரில் ரயிவே திணைக்களத்திற்கு சொந்தமான காணி ஒன்றில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியை மாநகர சபை வழங்கியுள்ளது.
இதற்கான அனுமதியை மாநகர முதல்வர் எவ்வாறு வழங்கினார் என்பது குறித்து சில அரச அதிகாரிகள் விசனமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை, ஏற்கனவே யாழ்.கஸ்தூரியார் வீதியில் மாடி கட்டிடம் ஒன்றை முறைகேடான முறையில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா துணைபோயுள்ளதாக முறைப்பாடுகள் வெளிவந்துள்ள நிலையிலேயே இச்சம்பவமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.