| தமிழர்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத, மகத்தான நவம்பர் மாதம்: கனடா உதயன் |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 03:32 PM] |
எம்மவர்கள் கலங்கிப் போயுள்ளனர். எதைச் செய்யலாம், எதைச் செய்யாமல் தவிர்க்கலாம் என்பது தெரியாமல் தவிக்கின்றனர். இவ்வாறான ஒரு நேரத்தில் தான் மகத்தான நவம்பர் மாதம் பிறந்திருக்கின்றது. இவ்வாறு கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் இதழ் தமது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. [மேலும்] |
| ஓசியன் விக்கிங் கப்பல் மேலும் ஒருவாரம் தரித்திருக்க இந்தோனேசியா அனுமதி |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 03:05 PM] |
இலங்கை அகதிகள் 78 பேருடன் தமது கடற்பரப்பில் தரித்திருக்கும் ஒசியன் விக்கிங் கப்பலை மேலும் ஒரு வார காலத்திற்கு தரித்திருக்க இந்தோனேசியா இன்று அனுமதி வழங்கியுள்ளது. [மேலும்] |
| வவு. செட்டிக்குளம் முகாமிலுள்ள பெற்றோரை இழந்த சிறுவர்கள் நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர் |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 02:49 PM] |
வவுனியா, செட்டிக்குளம் இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வன்னிப்போரினால் பெற்றோரை இழந்த சிறுவர், சிறுமியர் இன்று நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். [மேலும்] |
| நிசாந்த முதுஹெட்டிகம கைது செய்யப்பட்டுள்ளார் |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 02:36 PM] |
இலங்கை ஜனாதிபதியின் புதிய எதிர்ப்பாளரும், தென் மாகாணசபையின் உறுப்பினருமான நிசாந்த முதுஹெட்டிகம இன்று காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
| பாக்கு நீரிணை கடல் பகுதியில் இலங்கை கடற்படை ரோந்து அதிகரிப்பு: இராமேசுவரம் மீனவர்கள் தகவல் |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 01:17 PM] |
பாக்கு நீரிணை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் 20 போர் கப்பல்களில் ரோந்து சுற்றி வந்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர் என்று இராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர். [மேலும்] |
| மீள்குடியமர்த்தும் மக்களுக்கு வழங்கும் உதவித்தொகையை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 12:45 PM] |
மீளக்குடியேற்றப்படும் மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படுகின்றது. உடனடி தேவைக்காக 5 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. எனினும் தற்போது வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாவை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன். என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் என்.ஸ்ரீகாந்தா பா.உ. நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
[மேலும்] |
| கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் நியமனம் |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 10:16 AM] |
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த திருமதி ரூபவதி கேதீஸ்வரன் பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்] |
| பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரின் பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 09:18 AM] |
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பேர்னாட் குச்னர் தமது மனித உரிமைகள் ஆணையாளர் பிரான்கொய்ஸ் ஸிமெரெயை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். [மேலும்] |
| மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளர் நாயகம், ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைவு |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 09:12 AM] |
 மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான மு.சிவலிங்கம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. முன்னிலையில் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார். [மேலும்] |
| சவூதியில்,மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் குறித்து இலங்கைக்கு அறிவிக்கப்படவில்லை |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 09:10 AM] |
கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையர்கள் இருவரின் விவகாரங்களும் இரகசியமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| கனடாவுக்கு கப்பலில் சென்ற அகதிகளில் இருவர் புலிகளுடன் தொடர்பு?: கனேடிய அரசாங்க வழக்கறிஞர்கள் |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 09:06 AM] |
 இலங்கையில் இருந்து கனடா சென்ற 76 அகதிகளுள், குறைந்தது இரண்டு பேர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள் என கனடிய அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். [ மேலும்] |
| நாடு திரும்பிய சரத் பொன்சேகா ஜனாதிபதியையோ, சகோதரரையோ சந்திக்கவில்லை |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 09:00 AM] |
அமெரிக்காவில் யுத்த மீறல் தொடர்பான விசாரணைக்கு முகம் கொடுக்காது நாடு திரும்பிய கூட்டுப்படை தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா, இதுவரையில் முப்படைத்தளபதியான ஜனாதிபதியையோ அல்லது பாதுகாப்பு செயலாளரனான கோத்தபாய ராஜபக்ஷவையோ சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| இடம்பெயர் மக்களை மீள்குடியேற்ற உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: வெளிவிவகார அமைச்சர் |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 05:32 AM] |
இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றுவதற்கு உலக நடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. [மேலும்] |
| ராஜபக்ஷ கூட்டத்தை விரட்டியடிக்க பொதுவான அபேட்சகர் ஒருவர் தேவை: லால்காந்த |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 05:27 AM] |
ராஜபக்ஷ கூட்டத்தை விரட்டியடிப்பதற்கு பொதுவான அபேட்சகர் ஒருவரின் தேவை அவசியமானதென ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். [மேலும்] |
| சரத் பொன்சேகாவின் பிரதிநிதிக்கும் மனோ கணேசனுக்கும் இடையில் சந்திப்பு |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 05:23 AM] |
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரதிநிதிக்கும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| பல்வேறு தியாகங்களினால் ஈட்டப்பட்ட சுதந்திரத்தை காட்டிக் கொடுக்க முடியாது: ஜனாதிபதி |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 05:16 AM] |
 பல்வேறு தியாகங்களின் மூலம் ஈட்டப்பட்ட சுதந்திரத்தை காட்டிக் கொடுக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [ மேலும்] |
| இடம்பெயர் முகாம்களிலிருந்து படையினரை விலக்கிக் கொள்ள முடியாது: அரசாங்கம் |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 04:43 AM] |
இடம்பெயர் முகாம்களில் நிலைகொண்டுள்ள இராணுவப் படையினரை விலக்கிக்கொள்ள முடியாது என அரசாங்கம் அமெரிக்காவிற்கு அறிவித்துள்ளது. [மேலும்] |
| அமெரிக்காவின் விசாரணைகளை நிராகரித்தேன் : சரத் பொன்சேகா |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 04:38 AM] |
அமெரிக்காவின் விசாரணைகளை தாம் நிராகரித்ததாக ஜெனரல் சரத் பொன்சேகா திவயின பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். [மேலும்] |
| இலங்கை கடற்படையினரை எதிர்கொள்ள இந்திய மீனவர்களுக்கு ஆயுதம் வழங்கப்படவேண்டும் : தொல்.திருமாவளவன் |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 04:35 AM] |
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை சமாளிக்க, இந்தியா அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| இலங்கை குடிவரவு திணைக்களம் முன் வைத்த யோசனையை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ளது |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 04:29 AM] |
இலங்கை குடிவரவு திணைக்கள தலைமை அதிகாரியினால் முன்மொழியப்பட்டதாக கூறப்படும் திட்டத்தை, அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ் நிராகரித்துள்ளார். [மேலும்] |
| மக்களை மீள்குடியேற்றும் வரை இனப்பிரச்சினைக்கான தீர்வினை எதிர்ப்பார்க்க முடியாது: மத்திய வங்கி ஆளுநர் |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 04:16 AM] |
 இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை நிறைவுறும் வரை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை மேற்கொள்ள அரசாங்கத்தால் முடியாது என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். [ மேலும்] |
| உட்சந்தை மோசடி தொடர்பில் மேலும் 14 பேர் கைது: அமெரிக்க புலனாய்வுத்துறை |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 04:07 AM] |
ராஜ் ராஜரட்னத்தின் உட்சந்தை மோசடி தொடர்பில் மேலும் 14 பேர் மீது அமெரிக்க புலனாய்வுத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். [மேலும்] |
| அரசியல் தஞ்சம் கோர விரும்பினால் முதலில் கப்பலை விட்டு இறங்குமாறு ஐ.நா. ஆலோசனை |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 02:15 AM] |
இந்தோனேஷிய கடலில் கப்பலில் இருக்கும் இலங்கையர்கள் 78 பேரினதும் அரசியல் தஞ்சக் கோரிக்கைகள் வெற்றி பெற வேண்டுமானால், அவர்கள் முதலில் கப்பலை விட்டு இறங்கி கரைக்கு வர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனை கூறியுள்ளது. [மேலும்] |
| விசாரணையை எதிர்கொள்ளாமல் சரத் பொன்சேகா நாடு திரும்பியதாக வெளிவிவகார அமைச்சு உத்தியோக பூர்வ அறிவிப்பு |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 02:01 AM] |
முப்படைகளின் தலைமை அதிகாரியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவின் அனுமதியுடன் யுத்தக் குற்ற விசாரணைகளை எதிர்கொள்ளாமல், இலங்கையின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் நாடு திரும்பியுள்ளார் என வெளிவிவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. [மேலும்] |
| அகதிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம்: அரசியல் தீர்வை முன்வைக்கவும் கோரிக்கை |
| [வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 01:57 AM] |
வன்னி முகாம்களிலுள்ள அகதிகளை முற்றாக விடுவிக்குமாறும், அவர்களது பாது காப்பை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசிடம் வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றம் (மக்கள் பிரதிநிதிகள் சபை) கடந்த புதனன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. [மேலும்] |