செய்திகள் 2009-11-04
சவூதியில் இரண்டு இலங்கையர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 04:35 PM]
சவூதி அரேபியாவில் இன்று இலங்கையை சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்குமே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
நோர்வேயில் நடைபெற்ற தமிழ்ச்செல்வன் உட்பட்ட விடுதலை வீரர்களின் 2ம் வருட நினைவு வணக்க நிகழ்வு
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 04:05 PM] []
தமிழ் மக்களின் இதயங்களில் விடுதலை ஒளிபரப்பி நீங்காத நினைவுகளாய் வாழ்கின்ற விடுதலை வீரர்களின் நினைவு சுமந்து நோர்வே ஒஸ்லோவிலும் வீரவணக்க நிகழ்வு 02.11.2009 திங்கட்கிழமை அன்னை பூபதி றொம்மன் வளாகத்தில் மலை 6 மணிக்கு நடைபெற்றது. [மேலும்]
(2ம் இணைப்பு)
சரத் பொன்சேகா விசாரணைக்கு சமுகமளிக்காமல் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுவிட்டார்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 01:31 PM]
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையினரின் விசாரணைக்கு சமூகமளிக்காமல், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனது விஜயத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டதாக இலங்கை தகவல்கள் கூறுகின்றன.


[மேலும்]
(2ம் இணைப்பு)
படகு மூழ்கி காணாமல் போன இலங்கையர்களை தேடும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 12:28 PM]
படகு மூழ்கி காணாமல் போன இலங்கையர்களை தேடும் பணிகளை அவுஸ்திரேலியா கைவிட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூழ்கிய படகு கிழக்கு பிரதேசக் கடலில் இருந்தே புறப்பட்டுள்ளதென வெளியாகியுள்ள தகவலை இலங்கை கடற்படை மறுத்துள்ளது. [மேலும்]
இலங்கை நீதிபதிகளுக்கு விசா அனுமதி மறுக்கவில்லை என அவுஸ்திரேலியா தெரிவிப்பு
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 12:19 PM]
பீஜி தீவுகளுக்கு செல்லவிருந்த இலங்கையின் நீதிபதிகளுக்கு தமது நாடு விசா அனுமதியை மறுக்கவில்லையென அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. [மேலும்]
சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக பேச அவுஸ்திரேலிய விஷேட பிரதிநிதி இலங்கை வரவுள்ளார்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 12:12 PM]
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்குள் ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவதை தடுக்கும் முகமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அவுஸ்திரேலிய விஷேட பிரதிநிதி ஜோன் மெகாதி இலங்கை வரவுள்ளார்.
  [மேலும்]
புலிகளுக்கு ஆயுதம் விநியோகம் தொடர்பில் கைதான சிங்கப்பூர் அரசியல்வாதியை விசாரணைக்காக அமெரிக்கா அனுப்ப ஏற்பாடு
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 10:16 AM]

சிங்கப்பூர் சீர்திருத்தக் கட்சியின் இணை நிறுவனரான ராகவன் என்கிற பால்ராஜ் நாயுடு, விடுதலைப் புலிகளுக்கு ஆயுத  விநியோகம் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]

(4ம் இணைப்பு)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்னி விஜயம்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 09:51 AM] []
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை வன்னிக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு சென்ற ஜனாதிபதி இராணுவத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
நாடு திரும்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 09:48 AM]
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெளி நாட்டில் தங்கியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளனர். [மேலும்]
தமிழக மீனவர்கள் 18 பேர் கைது. இலங்கை கடற்படையை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 09:35 AM]
தமிழ்நாடு, புதுக்கோட்டையிலிருந்து நேற்று முன்தினம் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர், பிடித்துச் சென்றுள்ளனர். இவ் அடாவடித்தனத்தைக் கண்டித்து  நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.


[மேலும்]
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் மீது பொலிஸார் தடியடிப் பிரயோகம்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 09:00 AM]
இலங்கையின் தலைநகர் கொழும்பில் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி, கொழும்பு  லோட்டஸ் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிணைந்த வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகள் மீது  பொலிஸார் இன்று பிற்பகல், தடியடி பிரயோகம், கண்ணீர் புகைப்பிரயோகம்   மேற்கொண்டனர். [மேலும்]
கொழும்பில்,பிரிட்டனுக்கான புதிய விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல் தற்காலிகமாக நிறுத்தம்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 07:27 AM]
பிரிட்டனுக்கான புதிய விசா விண்ணப்பங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 23 ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. [மேலும்]
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு வழங்கப்படும்: ஜனாதிபதி
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 05:08 AM]
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் உள்ளடங்கலாக இந்த சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். [மேலும்]
கிழக்கு மாகாண ஆயுதக் குழுக்களிடம் ஆயுதங்களை களைவதற்கு மற்றுமொரு சந்தர்ப்பம்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 04:24 AM]
கிழக்கில் இயங்கி வரும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கு மீண்டுமொரு தடவை பொதுமன்னிப்பை அறிவித்து மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்க பாதுகாப்பு தரப்பினர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[மேலும்]
ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பதிலாக மக்கள் அரசாங்கத்தை கட்டியெழுப்ப எதிர்க்கட்சி கூட்டணி உருவாக்கம்: ரணில்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 04:09 AM]
ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பதிராக மக்கள் அரசாங்கமொன்றை கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் விரிவான கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
இராணுவத் தளபதிக்கும், அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 04:02 AM] []
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜயத் ஜயசூரியவிற்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெற்றீஷியா புட்டினாஸிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
[மேலும்]
கிளி., முல்லை. மாவட்ட அரச ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்; இல்லையேல் சம்பளம் நிறுத்தப்படும்: வடமாகாண ஆளுநர்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 02:39 AM]
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உட்பட மீளக்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதேசங்களில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் உடனடியாகத் தமது கடமைகளுக்குச் சமுகமளிக்க வேண்டுமெனவும், சமுகமளிக்கத் தவறுவோர்களின் சம்பளத்தை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அறிவுறுத்தியுள்ளார். [மேலும்]
கொழும்பில் இருந்து யாழ். வருபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை உடன் நீக்குங்கள்: அரச சார்பற்ற நிறுவன இணையம் ஜனாதிபதிக்குக் கடிதம்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 02:23 AM]
கொழும்பிலிருந்து விமானத்திலோ, கப்பலிலோ யாழ்ப்பாணத்துக்கு வருபவர்கள் மீண்டும் கொழும்புக்கு கப்பல் அல்லது விமானம் மூலமே பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உடனடியாக நீக்குமாறு யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
[மேலும்]
தேர்தலில் குதிப்பார் என்று அஞ்சி, சரத் பொன்சேகாவை அமெரிக்காவில் சிறைப்படுத்த அரசு சதி செய்கிறது: நாடாளுமன்றில் ஐ.தே.க எம்.பி.
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 02:00 AM]
ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவார் என்று அஞ்சி அவரை அமெரிக்காவில் சிறைப்படுத்த இந்த அரசாங்கம் சதி செய்கிறது என்று ஐ.தே.கட்சி எம்.பியான ஜோன் அமரதுங்க நேற்று நாடாளுமன்றில் கூறினார். [மேலும்]
சரத் பொன்சேகா மீதான விசாரணைகள் அமெரிக்காவில் இன்று நடைபெற ஏற்பாடு: முறியடிக்கும் முழு முயற்சியில் இலங்கை அரசு
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 01:51 AM]
இலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, தற்போது வாசிங்டனில் தங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிடம், இன்று அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். [மேலும்]
பொங்கு தமிழ் உரை குறித்த வழக்கிலிருந்து தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நால்வரும் விடுதலை
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 01:28 AM]
தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உ. நால்வருக்கெதிராக குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நிசாந்த ஹப்பு ஆராச்சி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்வதாக அறிவித்தார். [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்