Switch to
செய்திகள்
எரிக் சொல்ஹெய்மின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 03:33.47 AM ]
ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. [மேலும்]
சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்படத் தயார்: இரா.சம்பந்தன்
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 03:31.13 AM ]
சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்படத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். [மேலும்]
லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் இராணுவ பிரிகேடியர் ஒருவரிடம் விசாரணை
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 03:28.32 AM ]
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் தொடர்பில் இராணுவ பிரிகேடியர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். [மேலும்]
தேர்தல் மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.தே.க சத்தியாக்கிரக போராட்டத்தில்...
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 03:25.42 AM ]
தேர்தல் மோசடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி சத்தியாக்கிரக போராட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
ஜனாதிபதி உள்ளிட்ட சிரேஸ்ட தலைவர்களின் பாதுகாப்பு உயர்த்தப்படவுள்ளது
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 03:23.03 AM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிரேஸ்ட தலைவர்களின் பாதுகாப்பு உயர்த்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
வன்னி யுத்தத்தின்போது காணாமற்போன பிள்ளைகளை தேடும் பெற்றோருக்கு உதவக் கூட்டுமுயற்சி
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 02:36.28 AM ]
வன்னிப் பகுதியில் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த அனர்த்தங்களின் போது காணாமற்போன 18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளைத் தேடும் பெற்றோருக்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் உதவிகள் வழங்கப்படுகின்றன. [மேலும்]
தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பு தலைமைப்பீடம் இடமளிக்காது
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 02:24.25 AM ]
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இலங்கை தமிழரசுக் கட்சி இட ஒதுக்கீடுகளை வழங்கப் போவதில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஊடாக அறிய முடிகின்றது. [மேலும்]
இராணுவ புரட்சி செய்ய திட்டமிட்டதாக அரசு தெரிவிக்கும் குற்றச்சாட்டை மறுக்கிறார் பொன்சேகா
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 02:12.55 AM ]
ராஜபக்ஷ அரசை கவிழ்க்க, இராணுவ புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டதாக என் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல' என, இலங்கை இராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். [மேலும்]
தோ்தல் வன்முறையில் தாக்குதலுக்கு உள்ளான ஜே வி பி நகரசபை உறுப்பினர் மரணம்
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 03:53.32 PM ]
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முதல்நாள் (25 .01.2010)  திங்கட்கிழமை  தாக்குதலுக்கு உள்ளான ஜே வி பியின் அம்பலாங்கொட நகரசபை உறுப்பினர் இன்று மரணமானார். [மேலும்]
வாக்கு எண்ணும் நிலையங்களில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகளின் கார்பன் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு கபே கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 03:16.12 PM ]
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்கு எண்ணும் நிலையங்களில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகளின் கார்பன் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. [மேலும்]
சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்கப் போவதாக மகாநாயக்கர்களிடம் எதிர்க்கட்சிகள் தெரிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 03:09.57 PM ]
இலங்கையின் 62 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்கப் போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. [மேலும்]
மன்னார் நகரப்பகுதியில் மீண்டும் இராணுவ காவல் நிலையங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 01:59.23 PM ]
மன்னார் நகரப் பகுதியில் அகற்றப்பட்டிருந்த இராணுவ காவல் நிலையங்கள் மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச நிலை தோன்றியுள்ளது. [மேலும்]
மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது முறை ஜனாதிபதி பதவிக்காலம் நவம்பர் 19 ஆம் திகதியே ஆரம்பம்: உயர்நீதிமன்றம்
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 12:52.59 PM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் முறையான பதவி அமர்வு 2010 நவம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், ஜனாதிபதி எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதியன்று இரண்டாவது 6 வருட காலத்திற்காக பதவியேற்கவுள்ளார். [மேலும்]
கிளிநொச்சியில் அரச நிவாரணத்தை நம்பி வாழும் மீள்குடியமர்ந்த மக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 10:56.21 AM ]
கிளிநொச்சி மாவட்டத்தில்  மீள் குடியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரணங்களை மட்டும் நம்பி வாழ்கை  நடத்த வேண்டிய  நிலை ஏற்படுள்ளதாக கூறப்படுகிறது.இதனை அந்தப்பகுதியில் மருத்துவ ஆலோசனை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வரும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியார்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பதவி விலகல்கள் தொடர்கின்றன
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 10:20.17 AM ]
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பதவி விலகல்கள் தொடர்கின்றன. இதன்படி சுற்றுலாத்துறை அபிவிருத்தி சபை மற்றும், சுற்றுலா மேம்படுத்தல் சபையின் தலைவர் பெர்னாட் குணத்திலக தமது பதவியில் இருந்து இடைவிலகியுள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்