Switch to
செய்திகள்
அரச நிறுவனங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணிப்பு
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 04:36.33 PM ]
இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் சிலர் கடந்த சில நாட்களில் பதவி விலகிமையை தொடர்ந்து, அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களை தாமாகவே பதவி விலகுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.  [மேலும்]
ஊடகவியலாளர் ஸ்ரீரங்கா கலந்து கொண்ட கூட்டத்தில் கைகலப்பு
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 04:04.31 PM ]
இலங்கையின் சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளர் ஸ்ரீரங்கா கலந்து கொண்ட கூட்டத்தின் போது கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
மோசடித் தேர்தலுக்காக ஜனாதிபதிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்: மனோ கணேசன்
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 02:48.40 PM ]
இலங்கை வரலாற்றிலேயே எப்போதும் இடம்பெற்றிராத வகையில் மிக மோசமான தேர்தலை நடத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மோசடித் தேர்தலுக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். [மேலும்]
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் எதிரணி ஆர்ப்பாட்டம்
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 02:40.19 PM ]
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
செங்கல்பட்டு முகாம் உண்ணாவிரதிகள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை கண்டிக்கின்றேன்: பழ. நெடுமாறன்
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 01:55.46 PM ]
செங்கல்பட்டு ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் அப்பாவிகள் மீது கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசார் கொடூரமாக நடத்திய தாக்குதல் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுபடுத்துகிறது என்று பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். [மேலும்]
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்: மலேசிய தமிழ் எம்.பி. குணாளன் கோரிக்கை
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 01:14.21 PM ]
'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது மலேசிய அரசு எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை. அதுபோல இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என அரசை நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்' என மலேசிய தமிழ் எம்.பி குணாளன் கேட்டுக் கொண்டுள்ளார். [மேலும்]
தனிப்பாதையில் பயணிப்பதை இரா.சம்பந்தன் அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 01:03.25 PM ]
இலங்கையின் அச்சுறுத்தல்களுக்கும், இந்தியாவின் அழுத்தங்களுக்கும் முகம்கொடுத்துத் திணறிக்கொண்டுள்ள த.தே.கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களின் பலத்தினூடாக அதனைத் தகர்க்க முன்வர வேண்டும்.  புலம்பெயர் தமிழர்களின் அரசியல் விருப்புக்களைக் கணக்கில் எடுக்காமல் தனிப்பாதையில் பயணிப்பதை மூத்த தலைவரான சம்பந்தன் அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும். [மேலும்]
தடுப்புக்காவலில் உள்ள புலிச் சந்தேகநபர்களை இலங்கை அரசு விடுதலை செய்யவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 11:47.40 AM ]
தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுவோரை இலங்கை அரசு காலவரையறையின்றி தடுத்து வைப்பதை நிறுத்த வேண்டும். அவர்களில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்களை கண்டறிந்த பின்னர் ஏனையவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. [மேலும்]
ஜனாதிபதி தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பரப்பப்பட்ட செய்திகளில் உண்மையில்லை: தயானந்த திஸாநாயக்க
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 07:16.30 AM ]
தாம் துப்பாக்கி முனையில் பெறுபேறுகளில் கையொப்பமிட்டதாகவும், தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்படும் போது தாம் தேர்தல்கள் செயலகத்தில் இருக்கவில்லையென்றும், வெளியாகியதாக செய்திகளில் உண்மையில்லை என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். [மேலும்]
இராஜினாமா செய்யப் போவதில்லை என தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 06:55.49 AM ]
தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தாம் சேவையை நீடிக்கவுள்ளதாகவும், பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். [மேலும்]
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நேற்று தமிழக பொலிஸார் நடத்தியுள்ள, முள்ளிவாய்க்கால் கொடூரம்: அகதிகள் மூவர் படுகாயம்
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 06:43.25 AM ]
தமிழ்நாடு, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் மீது நேற்று இரவு சிறப்பு அதிரடி பொலிஸார் கண்முடித்தனமான முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பான தாக்குதலை நடத்தியுள்ளனர். இக் கொடூரத் தாக்குதலினால் மூன்று முகாம் வாசிகள் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். [மேலும்]
இலங்கை அகதிகள் சிலருக்கு அவுஸ்திரேலியா நிரந்தர விசாவை வழங்கியுள்ளது
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 05:55.59 AM ]
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பபட்டுள்ள இலங்கை அகதிகள் உட்பட்ட 94 பேருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நிரந்தர விசா அனுமதியை வழங்கியுள்ளது. [மேலும்]
மட்டு. மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரனுக்கு மரண அச்சுறுத்தல்
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 05:52.24 AM ]
மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரனுக்கு அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆயுதக்குழுவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
கெப்பிட்டிக்கொல்லாவ குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய புலி உறுப்பினர் கைது
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 05:48.15 AM ]
அனுராதபுர கெப்பிட்டிக்கொல்லாவ பிரதேசத்தில் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
தேர்தலின் பின்னர் குழப்பம் ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டிய 37 பேர் கைது
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 03:36.23 AM ]
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டிய 37 பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் பௌத்த பிக்குகள், இராணுவ உயரதிகாரிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்