Switch to
செய்திகள்
தமிழ்நாட்டுக்கு ஒப்பான ஒரு தாயகத்தை ஈழத்தமிழினம் காண விரும்புகின்றது: கருணாநிதியிடம் உ.த.ப. இயக்கம் விண்ணப்பம்
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 12:20.19 PM ]
உங்கள் காலத்திலேயே தமிழ்நாட்டுக்கு ஒப்பான ஒரு தமிழ்ர் தாயகத்தை ஈழத்தமிழினம் காண விரும்புகின்றது. இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தின் தலைமை அலுவலகம் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதிக்கு அனுப்பி வைத்துள்ள விண்ணப்பம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
கோவை உலகத் தமிழ் மாநாட்டிற்கு முன்னர் நளினி விடுதலை?
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 10:51.11 AM ]
அறிவுரைக் குழுவின் பரிந்துரையில் நளினி விடுதலைக்கு சாதகமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கோவையில் நடைபெறவுள்ள உலக தமிழர் மாநாட்டுக்கு முன்பு நளினி விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பரிந்துரை அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை. [மேலும்]
யாழ். பலாலி விமானத்தளத்தை சீர்படுத்திக் கொடுக்க இந்தியா ஒப்புதல்: இந்திய தூதுவர் காந்தா
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 10:24.03 AM ]
இலங்கையில் வடபகுதியில் உள்ள பலாலி விமானத்தளத்தை சீர்படுத்தி, மேம்படுத்தித் கொடுக்க இந்தியா முடிவு செய்துள்ளதாம். அதேபோல இலங்கையில் உள்ள துறைமுகங்களை மறு சீரமைத்துத் தரவும் அது ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார். [மேலும்]
சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,753 கைதிகள் விடுதலை
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 09:43.42 AM ]
இலங்கையின் 62 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 1,753 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. [மேலும்]
யாழ் மாவட்ட வாக்காளர் பட்டியல் குழப்பநிலை: தோ்தல்கள் ஆணையாளர் விளக்கம்
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 04:48.20 AM ]
யாழ்ப்பாண மாவட்ட வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அங்கு வாக்காளர்கள் வதிவிடமாக இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். [மேலும்]
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 04:33.46 AM ]
யாழ். மாவட்டம் கொழும்புத்துறை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். [மேலும்]
வடக்கு கிழக்கு மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மூன்று மில்லியன் நிதி உதவி
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 04:08.58 AM ]
வடக்கு கிழக்கு மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மூன்று மில்லியன் நிதி உதவி வழங்கத் தீர்மானித்துள்ளதென லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
பொன்சேகாவின் சூழ்ச்சித் திட்டம் குறித்து விசாரணை நடாத்த ஜெனரல் சூலா செனவிரட்ன நியமனம்
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 04:03.41 AM ]
ஜனவரி 27ம் திகதி அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சரத் பொன்சேகாவினால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சித் திட்டம் தொடர்பில் விசாரணை நடத்த முன்னாள் ஜெனரல் சூலா செனவிரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
17 ஆவது திருத்தச் சட்ட மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது : தேர்தல் ஆணையாளர்
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 03:56.14 AM ]
17 ஆவது திருத்தச் சட்ட மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாதென தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இந்தியாவின் நிலைப்பாடு: இந்திய செய்திதாள்களின் கருத்துக்கள்
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 03:19.45 AM ]
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவானமையை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை இந்தியா கவனமாக ஆராய்ந்து வருவதாக இந்திய தரப்புகள் தெரிவிக்கின்றன. அதேவேளை இந்திய நிலைப்பாடு குறித்து செய்தித்தாள்கள் பல்வேறு கலப்புக் கருத்துக்களை முன்வைத்துள்ளன. [மேலும்]
இலங்கைக்கு சுதந்திர நாள்! தமிழர்களுக்கு கரி நாள்! : பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 02:54.08 AM ] []
1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, ஈழத் தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் கைகளில் பிரிட்டன் தாரை வார்த்த இருண்ட நாள். இந்த நாள், பௌத்த-சிங்கள பேரினவாத நாட்டின் 62 ஆவது ஆண்டு சுதந்திர நாள். தமிழ் மக்களுக்கு இது 62 ஆண்டு கால அடக்குமுறை வாழ்வு. இந்த நாளை கறுப்பு நாளாக..... [மேலும்]
பத்திரிகையாளர் வித்தியாதரனுக்கு கிஷோர் எம்.பி. கொலை மிரட்டல்
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 02:26.57 AM ]
 "சுடர் ஒளி" பத்திரிகைகளின் ஆசிரியர் வித்தியாதரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று மாலை தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார். [மேலும்]
அதிகாரப் பகிர்வு உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்: முதல்வர் கருணாநிதி
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 02:06.49 AM ]
இலங்கையில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இலங்கை அரசு முன்னர் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என திமுக கோரியுள்ளதாக திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். . [மேலும்]
என்மேல் குற்றம் என்று நிரூபித்தால் தீக்குளிக்கவும் தயார்: பரமேஸ்வரன்
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 08:26.25 PM ] []
என் மீது குறைகூறுபவர்கள் குற்றத்தை நிரூபித்தால் தீக்குளிக்கவும் தயார் எனப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார் [மேலும்]
இரகசியப் பொலிஸாரின் நடவடிக்கைகளினால் அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்: கல்கிஸை நீதிவான்
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 04:44.13 PM ]
இலங்கையில், இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தை தவறான வழியில் இட்டுசெல்லக்கூடாது என கல்கிஸ்ஸை நீதிவான் இன்று எச்சரிக்கை விடுத்தார். அப்பாவிகளை கைது செய்வதையும், குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாட விடும் நடவடிக்கைகளையும் இரகசிய பொலிஸார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்