செய்திகள்
நெதர்லாந்தில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நினைவு வணக்க நிகழ்வுடன் நடைபெற்ற, மாவீரர் பேச்சு,ஓவியப்போட்டிகள்
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 01:59.31 PM ] []
நெத‌ர்லாந்தில் உத்ரெக் மாந‌க‌ரில், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட அவருடன் வீரச்சாவடைந்த 7 மாவீரர்களிற்குமான 2 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுடன், தமிழ் மாண‌வ‌ர்க‌ளிடையே மாவீரர் நினைவாக பேச்சு, ஓவியப் போட்டிகள் நேற்று முன்தின‌ம் (14.11.2009) சனிக்கிழமை ந‌டாத்த‌ப்ப‌ட்ட‌து. [மேலும்]
மகசீன் சிறை தாக்குதலை எதிர்த்து நடாத்தும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மனோ கணேசன் எம்.பி. அழைப்பு
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 01:41.57 PM ]
மகசீன் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலை கண்டித்து நமது ஜனநாயக மக்கள் முன்னணியும், மக்கள் கண்காணிப்புக் குழுவும் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டத்திலே அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு கலந்துகொள்ளவேண்டுமென மனோ கணேசன் எம்பி அழைப்பு விடுத்துள்ளார். [மேலும்]
மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் 200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் கைது
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 01:29.00 PM ] []
1996 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி கட்டிட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு கொண்டவர் என்ற குற்றச்சாட்டின்  பேரில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
முப்படைகளின் பிரதானிப் பதவியிலிருந்து விலகிச் செல்லும் சரத்பொன்சேகா மகிந்த சந்திப்பு!
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 12:40.18 PM ] []
முப்படைகளின் பிரதானி நிலையில் பதவி விலகிச் செல்லும் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். [மேலும்]
கனடா மொன்றியலில் இரத்ததானம்
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 11:08.05 AM ] []
கனடா மொன்றியல் மாநகரில் கனடியத் தமிழர் பேரவை கியூபெக் கிளையின் ஏற்பாட்டில் அடக்கப்பட்ட குரல்களினதும் அழிக்கப்பட்ட உறவுகளினதும் நினைவுகளை சுமந்து இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. [மேலும்]
அலெக்ஸ் உட்பட 130 இலங்கைத் தமிழர்களை நாடு கடத்த இந்தோனேசியா முடிவு
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 10:35.50 AM ]
மேற்கு ஜாவாவில் கப்பலில் தவித்தபடி இருக்கும் 250க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களில் 130 பேரை நாடு கடத்த இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. இந்தத் தமிழர்களின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படும் அலெக்ஸ் என்பவரையும் நாடு கடத்தப் போவதாக இந்தோனேசியா கூறுகிறது. [மேலும்]
மஹிந்த - பிரணாப் சந்திப்பு இரகசியமா?: இதுவரை அதிகாரபூர்வ செய்தி இல்லை
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 10:29.51 AM ]
இலங்கையில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் செய்த இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று ஜனாதிபதி ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அதுகுறித்து இலங்கை அரசுத் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்த செய்தி அறிக்கையும் வெளியிடப்படவில்லை. [மேலும்]
விமானப்படைத்தளபதி ரொஷான் குணதிலக, கூட்டுப்படைகளின் பிரதானியாகவும் நியமனம்
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 08:38.45 AM ]
விமானப்படை தளபதி ரொஷான் குணதிலகவை கூட்டுப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 08:24.30 AM ]
முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, முல்லைத்தீவு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். [மேலும்]
துணுக்காய் - கிளிநொச்சி, யாழ். - மன்னார் பேரூந்து சேவைகள் ஆரம்பம்
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 08:20.13 AM ]
மீள்குடியேற்றப்பட்ட மக்களின் போக்குவரத்து பணிகளுக்காக, துணுக்காய்க்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான பேருந்து ஒன்று நேற்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ஏ9 விதியூடான போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. [மேலும்]
அவுஸ்திரேலியாவில் அரசியல் அந்தஸ்து இல்லாத இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்: குடிவரவு அமைச்சர்
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 08:15.03 AM ]
அரசியல் அந்தஸ்த்துப் பெறத்தவறிய இலங்கையர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார். [மேலும்]
விடுதலைப்புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடிக்க இந்தியாவின் உதவி தேவை: கோத்தபாய ராஜபக்ஷ
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 08:07.43 AM ]
தமிழீழ விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடிக்க, இந்தியாவுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒத்துழைப்பு அவசியப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
ஜெனரல் சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமாக இன்று ஓய்வு: இரண்டு நாட்களிற்குள் எதிர்கால திட்டம் குறித்து அறிவிப்பதாக தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 08:02.35 AM ] []
கூட்டுப்படை தலைமையதிகாரி பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா, தாம் இராணுவ சீருடை அணியும் இறுதிநாள் இன்றாகும் என கூறியுள்ளதுடன், அரசியல் உட்பட்ட எதிர்கால தமது வேலைத்திட்டங்கள் குறித்து, இரண்டு நாட்களிற்குள் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களுக்கு நாட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை; சிறைச்சாலைக்குள்ளும் பாதுகாப்பில்லை: இடதுசாரி முன்னணி தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 03:24.09 AM ]
இருபது வருடங்களுக்கு முன்பு அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்ட அதே தினமான நவம்பர் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமிழ் அரசியல் கைதிகள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல், திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும் என இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்துள்ளார். [மேலும்]
வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து முக்கிய தொழிற்சங்கங்கள் இன்று தீர்மானிக்கும்
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 03:15.32 AM ]
மூன்று தினங்கள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து முக்கிய தொழிற்சங்கங்கள் இன்று தீர்மானிக்க உள்ளன.  [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்