Switch to
செய்திகள்
ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனியார் வைத்தியசாலையில் அனுமதி
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:27.09 AM ]
ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தானுன திலகரட்ன தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
எஸ்.பி திஸாநாயக்கவிற்கு பூரண பொது மன்னிப்பு; உடுநுவர தொகுதி அமைப்பாளராகவும் நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:11.39 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரான எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு, ஜனாதிபதியினால் பூரண பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
தற்போதைய அரசாங்கம் கொலைக் கலாச்சாரமொன்றை ஆரம்பித்துள்ளது: ரில்வின் சில்வா
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:06.28 AM ]
தற்போதைய அரசாங்கம் கொலைக் கலாச்சாரமொன்றை ஆரம்பித்துள்ளதாக ஜே.வி.பி கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். [மேலும்]
குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடுத்து நாட்டை அபிவிருத்தி செய்ய யோசனை முன்வைக்கவும்: எல்லாவல மேதானந்த
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:03.12 AM ]
அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடுத்து நாட்டை அபிவிருத்தி செய்ய யோசனைகளை முன்வைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் கோரியுள்ளார். [மேலும்]
அமைதி, வெற்றிகரமான இலங்கையை கட்டியெழுப்ப சர்வதேசம் உதவவேண்டும்: ஜனாதிபதி வேண்டுகோள்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 03:12.38 AM ]
அமைதியானதும் வெற்றிகரமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு உதவுமாறு சர்வதேச சமூகத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வோல் ஸ்ரிற் தேஜர்னல் என்ற சஞ்சிகைக்கு எழுதியுள்ள தமது அபிப்பிராய கட்டுரை ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு, ஜே.வி.பி.யின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சிப்போம்: ஐக்கிய தேசியக் கட்சி
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 02:56.24 AM ]
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சியமைக்க ·யற்சிகளை எடுப்போம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். [மேலும்]
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற முறையை ஆணையாளர் நியாயப்படுத்துவது ஏன்? : ஜே.வி.பி. விளக்கம்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 02:43.22 AM ]
ஜனாதிபதித் தேர்தலும், வாக்குகள் எண்ணும் பணிகளும் மோசடிகளின்றி நீதியாகவே இடம்பெற்றன என்று தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க கூறியமைக்கு பல காரணங்கள் உள்ளன என்றும்,  தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினால் தேர்தல் ஆணையாளர் மாத்திரமின்றி எவருமே உண்மையை மறைக்கவே செய்வர் என்றும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.  [மேலும்]
தடுப்புக் காவலிலுள்ள 11 ஆயிரம் புலிச் சந்தேகநபர்களையும் சந்திக்க முடியாத நிலைமை: மனிதாபிமான அமைப்புகள் விசனம்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 02:31.50 AM ]
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 11,000 பேரை தாம் சந்திக்க முடியாத நிலை காணப்படுவதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. [மேலும்]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்த கருத்துப் பரிமாற்றக் காலம் நீடிப்பு!: இணைப்பாளர் வி. ருத்ரகுமாரன்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 02:14.25 AM ] []
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கையை மேலும் செழுமைப்படுத்த கூடுதல் பங்களிப்பை வழங்கும் நோக்கில் கருத்துப் பரிமாற்றக்காலத்தை 15.02.2010 வரை நீடிப்பதென முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
திணைக்கள, கூட்டுத்தாபன தலைவர்கள் பதவி விலக வேண்டுமென்ற உத்தரவு தொடர்பில் ஐ.தே.க சந்தேகம்
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 04:46.23 PM ]
திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களைச் சேர்ந்த தலைவர்கள் பதவி விலக வேண்டுமென்ற அரசாங்கத்தின் உத்தரவு குறித்து ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது. [மேலும்]
இடம்பெயர் மாணவர்கள் வவுனியாவில் கல்வி கற்க கல்வி பணிப்பாளரினால் அனுமதி மறுப்பு
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 04:42.25 PM ]
போரினால் இடம்பெயர்ந்து  தமது வாழ்வைத் தொலைத்துவிட்டு  வவுனியாவின் பல பகுதிகளிலும் வசித்துவரும் மாணவர்களை வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் கல்விகற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
காணாமல் போன ஊடகவியலாளர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 03:43.41 PM ]
கடந்த 24 ஆம் திகதி காணாமல் போன லங்கா இ நியூஸ் இணையத்தளத்தின் செய்தியாளர் பிரகீத் எக்னாலிகொட இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை [மேலும்]
தமிழீழத்தின் இதயமாக விளங்கிய கிளிநொச்சி நகரில் இப்போது மக்கள் நடமாட்டம் அற்ற நிலை காணப்படுகிறது.
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 02:11.48 PM ] []
கட்டடங்களோ ஆளரவம் அற்ற பேய்வீடுகளாக உள்ளன. ஆங்காங்கே கைவிடப்பட்ட மாடுகள் கூட்டம் கூட்டமாக நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதிலிருந்தே அங்கு நடந்துள்ள இன அழிப்பு நன்கு புலப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
இலங்கை வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே : சுதந்திர தின நிகழ்வில் மகிந்த ராஜபக்ஷ
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 01:48.46 PM ] []
இலங்கையின் ஜனாதிபதி வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே என்பதில் பெருமை கொள்கிறேன். அரசியல்வாதிகள் மக்களை ஒரு போதும் தவறான பாதையில் வழிநடத்தக் கூடாது. நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இனியும் அவ்வாறான செயலை செய்ய மாட்டேன்" என இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சுதந்திர தின வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். [மேலும்]
ஈழ அகதிகளின் செங்கல்பட்டு முகாமில் நடாத்தப்பட்ட பொலிஸாரின் தாக்குதல் பற்றிய ஆய்வு
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 01:01.13 PM ]
தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் அண்மையில் அதாவது 02 /01 /2010 இல் நடத்தப்பட்ட காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் மிகுத்த மன வேதனையை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இது தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் நடைபெற்ற சம்பவம். [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்