Switch to
செய்திகள்
(2ம் இணைப்பு)
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ராஜினாமாவை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவிப்பு
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 03:24.28 AM ]
ஜனாதிபதி தேர்தலில் யாழில் தமது கட்சிக்கு மக்கள் வாக்களிக்காமையை அடுத்து அமைச்சுப்பதவியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்தும் விலகப்போவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்த ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இன்று ராஜினாமா தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். [மேலும்]
இலங்கையில் ஊடக அடக்குமுறை மீண்டும் தலைதூக்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 03:07.59 AM ]
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இரண்டு நாட்களுக்குள் ஊடகவியலாளர்களை துன்புறுத்தும், கைதுசெய்யும் மற்றும் செய்தித்தணிக்கை நடவடிக்கைகள் மீண்டும் மேற்கொள்ளப்படுவதாக ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
தேர்தல் முடிவுகளில் கணினி மயப்படுத்தப்பட்ட மோசடி சர்வதேச சமூகத்திற்கு நாம் விளக்கிக் கூறுவோம்: ஐ.தே.க. அறிவிப்பு
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 02:36.09 AM ]
இறுதி தேர்தல் முடிவுகளில் கணினிமய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. உண்மையான தேர்தல் முடிவுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. எனவே இறுதி தேர்தல் முடிவுகளை ஐக்கிய தேசிய முன்னணி முற்றாக நிராகரிக்கின்றது. இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார். [மேலும்]
சரத் பொன்சேகா வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்படவில்லை: அரசாங்கம்
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 02:01.15 AM ]
பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா வெளிநாடு செல்வதற்கு எந்த விதமான தடைகளும் விதிக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. [மேலும்]
தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் நின்றபடி நாம் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ளவேண்டும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வேண்டுகோள்
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 11:12.45 PM ]
இலங்கைக்கான ஆறாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் முடிவுகள் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்திருக்கலாம். [மேலும்]
வீரத்தமிழன் முத்துக்குமாருக்கு நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் வணக்கம்
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 04:19.45 PM ]
ஈழ விடுதலைக்கு என்றுமே உறுதுணையாய் நின்று வரும் தமிழக மக்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்த்து, தமிழீழ மக்களுக்காய் தன்னுயிரை ஈந்தளித்த வீரத்தமிழ் மகன் முத்துக்குமாருக்கு நோர்வே ஈழத்தமிழர் பேரவை வீரவணக்கத்தை செலுத்துகிறது. [மேலும்]
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் வரவழைக்க அரசாங்கம் முயற்சி: விமல் வீரவன்ச
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 03:12.29 PM ]
பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்லாமல் அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியி;ன் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். [மேலும்]
இனப்பிரச்சினை தீர்வு முன்னெடுக்கப்பட வேண்டும்: ஜப்பான்
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 03:07.29 PM ]
இலங்கை அரசாங்கம், இடம்பெயர்ந்த மக்களை விரைவில் குடியேற்றுவதுடன், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என ஜப்பான் வலியுறுத்தியுள்ளது. [மேலும்]
பொதுத்தேர்தலில் தெரிவாகும் தமிழ் தலைமைகளுடன் அரசியல் தீர்வு குறித்து ஆலோசனை நடத்தப்படும்: மஹிந்த
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 03:04.39 PM ]
எதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து அதில் தெரிவாகும் தமிழ் தலைமைகளுடன் கலந்துரையாடி, இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். [மேலும்]
சுவிஸ் செய்தியாளரை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 02:43.17 PM ] []
இலங்கையில் இருந்து செயற்படும் சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் வீசாவை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்துள்ளது. இந்த நிலையில் அவரை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
“லங்கா” செய்தித்தாளின் ஆசிரியர் கைது
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 02:21.29 PM ]
ஜே வி பி சார்பு செய்தித்தாளான “லங்கா” வின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த குற்றத்தடுப்பு பொலிஸாரால் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். [மேலும்]
யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக உப அலுவலகம்
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 02:14.17 PM ]
இலங்கையில் வடபகுதி யாழ்ப்பாணத்தில் இந்தியா விரைவில் தூதரகத்தின் உப  அலுவலகம் ஒன்றை  தொடக்கவுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சியில் வர்த்தகர் அடித்துக்கொலை
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 01:08.50 PM ] []
பாண்டியன்குளம் மல்லாவியைச் சேர்ந்த கிளிநொச்சி ஆனந்தபுரம் கலைகடல் வியாபார நிலைய உரிமையாளரான வேலுப்பிள்ளை சசிறூபன் (சுதன்) என்பவர் இனந்தெரியாதோரால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி தேர்தலின் பின் தமிழ் மக்கள் மீது அரசாங்கத்தின் அதிருப்தி: வடக்கு நலன்புரி நிலையங்களின் சுகாதார சேவை விலக்கல்
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 12:10.15 PM ]
வடக்கின் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுகாதார சேவைகளில் இருந்து, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் விலகிக் கொள்ளவிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. [மேலும்]
புலிகளின் முக்கிய உறுப்பினர் மலேசியா ராஜன் கைது!?
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 11:53.48 AM ]
விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரான "மலேசியா ராஜன்" சிறிலங்கா புலனாய்வு பிரிவு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவொன்றின் கூட்டுச்சதி மூலம் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்